தமிழை கூப்பிடுவேன் என அடம்பிடிக்கும் நடேசன்.! உச்சகட்ட கோபத்தில் ராகினி எடுத்த அதிரடி முடிவு.! பயத்தில் அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார்கள் ரிசல்ட் என்ன ஆச்சு என கேட்க ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளதாக டாக்டர் கூறுகிறார் இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி சந்தோஷப்படுகிறார்கள். உடனே வீட்டிற்கு
கிளம்புகிறார்கள் அங்கு நடேசன் மற்றும் நமச்சி இருவரும் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹாஸ்பிட்டலில்  இருந்து வந்த தமிழ்
மற்றும் சரஸ்வதி இடம் ரிசல்ட் என்னாச்சு என கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை இருவரும் நலமாக
இருக்கிறோம். சீக்கிரம் எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதை
தமிழ் கூற நடேசன் சந்தோசப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த
நேரத்தில் எனக்கு அறுபதாம் கல்யாணம் நடக்க இருக்கிறது அதற்கு
கண்டிப்பாக இரண்டு பேரும் வரவேண்டும் என கூறுகிறார் ஆனால்
தமிழ் தயக்கத்துடன் நான் எப்படி அங்கு வர முடியும் என கூற அதற்கு
நடேசன் அதெல்லாம் முடியாது வந்து தான் ஆகணும் நீ தான் எனக்கு
தண்ணீர் ஊத்தணும் என நடேசன் கூறுகிறார்.

அதன் பிறகு நடேசன் வீட்டில் கிளம்புகிறார் வீட்டிற்கு சென்ற நடேசன்
இடம் கோதை எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்க ஏதேதோ சொல்ல
அதற்கு கோதை நீங்க சரஸ்வதி வீட்டுக்கு தான் போயிட்டு வரீங்கன்னு
தெரியும் அதுக்கு ஏன் மறைக்கிறீங்க என பேசுகிறார். பிறகு நடேசன்
அறுபதாவது கல்யாணத்திற்கு தமிழையும் சரஸ்வதியும் கூப்பிட
வேண்டும் என கோதையிடம் கூற அது எப்படி முடியும் அதுக்கு எப்படி
வீட்ல இருக்காங்க ஒத்துப்பாங்க பேசுகிறார்.

இது நமக்கு நடக்க இருக்கும் அறுபதாவது கல்யாணம் அவனும் நமக்கு
தண்ணி ஊத்தணும் இதுதான் சம்பிரதாயம் என்பது போல் நடேசன்
கூற உடனே நான் பார்த்துக்கிறேன் நீ வா என நடேசன் கோதை
அழைத்துக் கொண்டு வருகிறார். அப்பொழுது கீழே சென்று நடேசன்
தமிழையும் அழைக்கப் போகிறோம் எனக் கூற ராகினி
உச்சக்கட்டமாக சண்டை போடுகிறார். அதுமட்டுமில்லாமல்
அசோசியேஷன் பிரசிடெண்ட் என்ற நிலையில் வந்து விட்டு
போகட்டும் என கூற அதற்கும் ராகினி ஒத்துவர மறுக்கிறார், தமிழ்
இங்கே வந்தா நான் வீட்டை விட்டு கிளம்பி விடுவேன் என
மிரட்டுகிறார்.

ஒரு காலகட்டத்தில் இப்படியே பேசிக் கொண்டிருக்க ராகினி வீட்டை
விட்டு வெளியே கிளம்பப் போகிறார் அதற்கு அர்ஜுனையும்
கூப்பிடுகிறார் ஆனால் அர்ஜுன் போட்ட திட்டம் எல்லாம் வீணாப்
போய்விடும் என அமைதியாக இரு என ராகினிடம் பேச ராகினி
உச்சகட்ட கோபத்தில் கத்துகிறார் இதனால் மயக்கம் அடைந்து
விடுகிறார்.

அர்ஜுனனின் குடும்பம் ராகினி மயக்கம் அடைந்து விழுந்ததால்
உங்களுக்கு ராகினியும் ராகினி வயிற்றில் இருக்கும் குழந்தையை
பற்றி கவலையே கிடையாது அதனால் தான் இப்படி செய்கிறீர்கள் என
பேச கோதை மனசு மாறி தமிழை கூப்பிட வேண்டாம் நமக்கு
ராகிணியும் குழந்தையும் இப்போதைக்கு ரொம்ப முக்கியம் என்பது
போல் கோதை கூற நடேசன் வருத்தமடைகிறார் இத்துடன் இன்றைய
எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version