தமிழுக்காக தோண்டிய குழியில் தானே விழுந்த அர்ஜுன்.! மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் பைலை தூக்கி எறிந்த கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் உமாபதி சார் காண்ட்ராக்ட் க்ளோஸ் பண்ணியதால் கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு மிகப்பெரிய நஷ்டம் வந்துவிட்டது. இதனை சரி கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் உமாபதி தான காண்ட்ராக்ட்டை குளோஸ் பண்ணியது அதனால் லீகலா ஒரு நோட்டீஸ் அனுப்பலாம் என அர்ஜுன் ஐடியா கொடுக்கிறார் அதைக் கேட்டுகிட்டு கோதையும் நோட்டீஸ் அனுப்ப கூறிவிடுகிறார்.

அசோசியேசன் பிரசிடெண்டாக இருக்கும் தமிழிடம் செல்கிறது இந்த பிரச்னை. தமிழிடம் உமாபதி நேர்மையான பதிலை கொடுங்கள் என கூறுகிறார். ஆனாலும் கோதை தரப்பிலிருந்து நடேசன் ஒரு நல்ல பதிலையும் முடிவையும் கொடுங்கள் என கூறுகிறார். இப்படியே போக அடுத்த நாள் அசோசியேஷன் ஆபீஸ்க்கு அனைவரும் வருகிறார்கள் அங்கு வந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு உமாபதி சாருக்கும் வணக்கம் வைக்கிறார் தமிழ் ஆனால் உமாபதி வணக்கம் என கூறிவிட்டு எதையும் சொல்லாமல் போகிறார் இதனால் தமிழ் வருத்தம் அடைகிறார்.

பிறகு கோதை இன்டஸ்ட்ரியல் இருந்து அனைவரும் வருகிறார்கள் வந்தவுடன் ஆபீஸ்க்கு உள்ளே போகிறார்கள். கோதை சைடுல இருந்து கார்த்தி தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் வந்ததாக கூறுகிறார். அதனால் இருபது லட்சம் நஷ்ட ஈடு கேட்கிறார். இதைப் பார்த்த உமாபதி ஒரு பைசா கூட நஷ்ட ஈடு தர முடியாது இந்த பிரச்சனைக்கு காரணம் நீங்க தான் நீங்க திருடியதை மட்டும் ஏன் வெளியில சொல்ல மாட்டேங்கிறீங்க என்பது போல் கேட்கிறார். உடனே தமிழ் தீர்ப்பு சொல்கிறார் கோதைப்பாக்கம் லீகலா எந்த தப்பும் கிடையாது அவங்க 20 லட்சம் உமாபதி சாரிடம் கேட்டது கரெக்ட்டு தான் என்பது போல் கூற உமாபதி அதிர்ச்சி அடைகிறார்.

அதேபோல் உடனே கார்த்தி எழுந்து நின்று அப்புறம் என்ன 20 லட்சம் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க என கூறிவிட்டு வெளியே கிளம்ப ஏந்திரிக்கிறார் அப்பொழுது இரு தம்பி பொறுமையாக இரு என கூறிவிட்டு தமிழ் பேச ஆரம்பிக்கிறார். இந்தப் பிரச்சனைக்கு காரணமே உங்க கம்பெனியில் இருந்து சரஸ்வதி இண்டஸ்ட்ரியல் இருக்கும் பொருளை திருடியது தான். நீங்க திருடாம இருந்திருந்தா அவரு ஏன் காண்ட்ராக்டர் க்ளோஸ் பண்றாரு அது மட்டும் இல்லாம நீங்க திருட சொன்னது உமாபதி சாரோட பொருளை தான் என கூறுகிறார்.

அதனால் உமாபதியும் பெனால்டி கட்டினார் வேறொரு கம்பெனிக்கு என கூறுகிறார். சரி ஓகே நீங்க லீகலா மூவ் பண்ணுங்க ஆனா திருட சொன்னதுக்கு உங்க சைடுல திருட சொன்னவங்களையும் திருட சொல்லி தூண்டுனவர்களையும் அரெஸ்ட் பண்ணுவாங்க ஓகேவா என்பது போல் கேட்கிறார் தமிழ். இதனால் உமாபதி ஒரு பைசா கூட தர முடியாது என தீர்ப்பை வழங்குகிறார். இதனால் அது அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் ஆனால் அர்ஜுன்முகம் சந்தோஷத்தில் இருக்கிறது ஏனென்றால் கோதைக்கு தமிழ் மீது வெறுப்பு வந்து விட்டதாக நினைக்கிறார்.

கோதை எதுவும் பேசாமல் எழுந்து செல்கிறார். தமிழுக்கு நேர்மையாக தீர்ப்பு சொன்னதுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். வீட்டிற்கு வந்த கோதையிடம் தமிழ் இப்படி தான் பேசுவான் அவன் எப்பவுமே உமாபதி சாருக்கு தான் சப்போர்ட் பண்ணுவான் என அனைவரும் கோதையிடம் ஏற்றி விடுகிறார்கள் ஆனால் வசு தமிழ் எப்பவுமே நேர்மையா தான் நடந்து கொள்வார் இப்ப கூட நேர்மையா தான் பதில் சொல்லி இருக்காரு என கூறும் அர்ஜுன் குடும்பம் வசு விடம் சண்டை போடுகிறார்கள்.

அந்த சமயத்தில் வசு நீங்க ரெண்டு பேரும் திருடியதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் என கூறுகிறார். உடனே நடேசன் இதையேதான் கூறுகிறார், அந்த சமயத்தில் அர்ஜுன் நம்ம கிட்ட இருக்கிற மெட்டீரியல் ப்ரொடக்ஷன் பண்ண ஒரு ஐடியா இருக்கு என கூறுகிறார் உடனே அந்த சமயத்தில் பைலை கோதையிடம் எடுத்துக்காட்டுகிறார் ஆனால் கோதை கோபத்தில் பைலை தூக்கி எறிகிறார்.

தேங்கி கிடக்கிற மெட்டீரியல் எப்படி மூவ் பண்றதுன்னு தெரியல இதுல புது ஆர்டர் எடுக்குறீங்களா என கோபப்படுகிறார் இந்த எல்லா பிரச்சனைக்கும் முழுக்க முழுக்க காரணம் நீங்க மட்டும் தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கோதை அர்ஜுனை திட்டி விட்டு செல்கிறார் அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதி நமச்சி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் நேர்மையாக தான் இருப்பேன் நேர்மையாக தான் தீர்ப்பு சொல்வேன் என பேசிக் கொண்டிருக்கிறார் இதை உமாபதி கேட்டு விடுகிறார்.

ஊமாபதி கேட்டுவிட்டு வந்து கைதட்டுகிறார் நீங்க முதல்ல ஆர்டர் கொடுக்கும்போது நேர்மையாக இருந்தீங்க இப்பவும் நேர்மையா அதே நேர்மையோடு இருக்கீங்க என பாராட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது அர்ஜுன் போட்ட திட்டத்தில் அர்ஜுனுக்கு தான் மூக்குடைந்து நிற்கிறார் இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment