அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.! முதன் முறையாக தமிழை திருப்பி அடித்த அர்ஜுன்.! இனி எழுந்திரிக்கவே முடியாது போல..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை குடும்பத்தில் உள்ள அனைவரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது  வசு தமிழை பார்த்து நீங்க பேசாம வக்கீல் ஆகிடலாம் நீங்களே எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சீங்க அர்ஜுன் மாட்டிக்கிட்டு திண்டாடுரான் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் நம்ம கம்பெனி 2000 பேர் வேலை செய்ற கம்பெனியை விரைவில் மாறிவிடும் எனக்கோதையிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நடேசன் அதே மாதிரி நம்ம சொத்தையும் மீட்டிடுவோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கு வாங்க கிளம்பலாம் என நமச்சியை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் அங்கு போனவுடன் நமச்சுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மற்றொரு பக்கம் அர்ஜூன் ராகினியை நம்ப வைப்பதற்காக நான் எல்லாத்தையும் உங்க அம்மாகிட்டயும் கொடுத்துட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம் நம்ம ஊருக்கே போயிடலாம் ஏதாவது சின்ன வீடா வாடகைக்கு எடுத்துக்கிட்டு கெடச்ச வேலையை செஞ்சுகிட்டு சந்தோஷமா இருக்கலாம் நீ போய் என்னை சந்தேகப்பட்டுட்டியே என அழுது புலம்புகிறார்.

அர்ஜுன் நடிப்பை நம்பி ராகினியும் இனிமேல் உங்களை சந்தேகப்பட மாட்டேன் என கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் கம்பெனிக்கு போன நமச்சி பேனர் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் சரஸ்வதி மற்றும் தமிழ் புகைப்படம் பேனரில் போடப்பட்டுள்ளது. இதை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என நமச்சி முயற்சி செய்யும்பொழுது மேகனா வருகிறார் எதற்காக இவர்கள் புகைப்படத்தை போட்டுள்ளார்கள் எனக் கேட்க உடனே நமச்சி அதான் எனக்கும் டென்ஷன் ஆயிடுச்சு.

இது அந்த அர்ஜுன் ஓட வேலையா இருக்கும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அர்ஜுன் வெளியே நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே மேகனா உள்ளே செல்கிறார் பேனர் வைத்தது ஒர்க் அவுட் ஆகவில்லை என உள்ளே இருப்பவரிடம் அர்ஜுன் போன் பண்ணி தம்பதிகளை விளக்கு ஏற்று சொல்லு என கூறி விடுகிறார். முதலில் முதலாளியை விளக்கேற்ற சொல்லிவிட்ட ஐயர் அடுத்தது தம்பதிகளாக விளக்கு ஏற்றுங்கள் என கூறுகிறார்.

அதற்குள் நமச்சி மேகனாவின் மாமாவிடம் போன் செய்து ஏதாவது செய்யுங்கள் எனக் கூற அந்த சமயத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி விளக்கு ஏற்றுகிறார்கள் ஆனால் அப்பொழுது மேகனாவின் வேலைக்காரம்மா பார்க்கிறார் உடனே அதிர்ச்சி அடைகிறார் அப்பொழுது மேக்னாவும் பார்த்த அதிர்ச்சி அடைத்து உங்க ரெண்டு பேருக்கு திருமணம் ஆயிடுச்சா ஏன் என்கிட்ட இருந்து மறச்சீங்க என கத்துகிறார்.

கோதை குடும்பம் அனைவரும் ஏன் எங்களுக்கு திருமணம் ஆனது உங்களுக்கு தெரியாதா? என பதிலுக்கு பேச எல்லாரும் சேர்ந்து என சீட் பண்ணி இருக்கீங்க என மேக்னா கத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.