ராகினி குடுத்த கம்ப்ளைன்ட்.!! தமிழை கைது செய்த போலீஸ்.. நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது வால தான் ஆட்டும் பாஸ்..

விஜய் டிவியில் தற்போது வெளிவந்துள்ள தமிழம் சரஸ்வதியும் ப்ரோமோவில்  அர்ஜுன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என ராகினி போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து தமிழ் தான் எல்லாத்துக்கும் காரணம் அவர அரெஸ்ட் பண்ணி கேட்டா தெரியும் என வீட்டிற்கு போலீசை கூப்பிட்டு வருகிறார்.

போலீஸ் வந்ததும் தமிழை அரெஸ்ட் பண்ணனும் என சொல்கின்றனர். உடனே அதற்கு கோதையும் நடேசனும் எதற்காக என போலீசை கேட்கின்றனர். அதற்கு அர்ஜுன் காணவில்லை அவரை தமிழ் தான் கடத்தி வைத்திருப்பார் என ராகினி கேஸ் கொடுத்திருக்காங்க என கூறுகிறார் போலீஸ்காரர்.  உடனே கோதை ராகினியை பார்த்து நைட் உன் புருஷன் வரலையா என கேட்கிறார்.

ஆமாம் வரல என  சொல்கிறார் அப்போது பாரமு இவன் தான் கண்டிப்பா கடத்தி வச்சிருப்பான் வேற யாரும் செய்ய மாட்டாங்க என கூறுகிறார். தமிழோ நடப்பதை பார்த்துக் ஷாக் ஆகி நிற்கிறார். அதற்கு கோதை தமிழ் அப்படி பட்டவன் இல்ல என சொல்கிறார். அதற்கு போலீஸ்  எனக்கும் தெரியும் ஆனா வேற வழி இல்ல ராகினி தான் அவர் மேல கேஸ் கொடுத்து இருக்காங்க நான் என்ன பண்ணட்டும் என சொல்கிறார்.

அது மட்டுமில்லாமல் நமச்சியும்  கார்த்தியும் உங்களுக்கு வேற வேலையே இல்லையா அவன் கானா போனதுக்கு நாங்க தான் காரணமா என கேட்கின்றனர். சரஸ்வதியும் வசுவும் ராகினியை முறைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இந்த பிரம்மோ முடிவடைகிறது.