மாப்ள அர்ஜுன் நீ போடற மனக்கணக்கை சுக்குநூறா ஒடச்சிடுவான் தமிழ்.! தப்பான ஆள லவ் பண்றியே மேக்கனா… தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேக்னா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் நமச்சி இருவரும் நாங்கள் கிளம்புகிறோம் எனக் கூற கையெடுத்து கும்பிடுகிறார்  ஆனால் மேகனா கை கொடுக்க சொல்கிறார் இருவரும் கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் மேக்னா தமிழையே காதல் பார்வையில் பார்க்கிறார்.

பிறகு தமிழ் வீட்டிற்கு கிளம்புகிறார் ஆனால் அங்கு சரஸ்வதி தமிழ் போன காரியம் என்ன ஆச்சு? என புலம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது வசுவை அழைத்து கார்த்தி இடம் ஏதாவது தமிழ் சொன்னாரா என கேட்க அப்படி எதுவும் சொல்லவில்லையே எனக் கூறுகிறார். அந்த சமயத்தில் கோதை மற்றும் நடேசன் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு செக்கப் முடித்துவிட்டு வருகிறார்கள் அவர்களுக்கு என்ன ஆச்சு என விசாரித்து கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுதுதான் தமிழ் கால் பண்ணுகிறார்.

போனை அட்டென்ட் பண்ணியா சரஸ்வதி வரிசையாக பல கேள்விகளை கேட்க அதற்கு தமிழ் ரயில் மாதிரி கேட்காத போன காரியங்களை நல்லபடியா முடிஞ்சிடுச்சு நம்ப வேலைய ஸ்டார்ட் பண்ணிடலாம் என சந்தோசமாக கூறுகிறார் உடனே போனை வாங்கி கோதை எனக்கு ஒரு பிரச்சனை கிடையாது நான் நல்லா இருக்கேன் நீ சீக்கிரம் வா வேலைய ஸ்டார்ட் பண்ணிடலாம் என பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த நாள் அதிகாலையில் தமிழ் கம்பெனியில் ஒரு மெஷின் ரிப்பேர் ஆகிவிட்டது அதனை தமிழ் வந்தவுடன் நமச்சி கூறுகிறார் உடனே அதனை ரிப்பேர் செய்யப் போகிறார் தமிழ் அந்த சமயத்தில் மேக்னா கால் பண்ணுகிறார் சரஸ்வதி ஃபோனை அட்டென்ட் பண்ணி நீங்க மேக்னா தானே என பேசிக் கொண்டிருக்கிறார் உடனே தமிழிடம் போனை சரஸ்வதி கொடுக்க தமிழும் பேசுகிறார்.

ஆனால் மேகனா சரஸ்வதி பேசியதால் சந்தேகப்படுகிறார் உடனே யார் என்ற குழப்பத்தில் இருக்கிறார் ஆனால் கலிவரதனுக்கு தமிழுக்கு கல்யாணம் ஆகிவிட்டது தெரியக்கூடாது என எண்ணி உமாபதி இடம் பேசுவது போல் சமாளிக்கிறார் உடனே மேக்னாவிடம் அது அவங்க ஆபீஸில் வேலை செய்யும் பெண் என கூற அதனால் மேக்னா  சமாதானமும் அடைகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுனிடம் ஓடிவந்து அர்ஜுனனின் மாமா தமிழ் எல்லா வேலையும் ஸ்டார்ட் பண்ணிட்டான் டே நைட் ஷிப்ட்டா வேலை நடக்குது அந்த தமிழ் சீக்கிரம் முடித்துவிடுவேன் ஏதாவது நம்ம பண்ணனும் என கூற என்ன பண்ண முடியும் என அர்ஜுன் கேட்கிறார் அப்பொழுது தமிழின் மாமா நம்ம ஆளுங்க அங்க இருக்காங்களா அவங்க கிட்ட சொல்லி மறுபடியும் கம்பெனியை கொளுத்த சொல்லலாம் என கேட்க ஏன் என்னை ஜெயில்ல வைக்க பார்க்கிறாயா? அதெல்லாம் அவங்களால இந்த வேலையை முடிக்க முடியாது அதுக்கு வாய்ப்பே இல்லை என பேசுகிறார்.

இன்னும் ஐந்து நாட்களில் எப்படி டெலிவரி பண்ண முடியும் அதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது கண்டிப்பா அவங்களுக்கு இனிமே ஆர்டர் கிடைக்க போறதில்லை அதனால நாம எதுவுமே செய்ய வேணாம் வேடிக்கை பார்த்தாலே போதும் என அர்ஜுன் கூறுகிறார் ஆனால் அர்ஜுனனின் மனக்கணக்கு தவறாக தான் போகப் போகிறது ஏனென்றால் தமிழ் நைட் பகலாக கண்விழித்து கண்டிப்பாக இந்த வேலையை முடித்து விடுவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.