சாமர்த்தியமாக மொத்த பழியையும் தமிழ் மீது தூக்கிப் போட்ட அர்ஜுன்.! பத்ரகாளியாக மாறிய ராகினி.. தமிழும் சரஸ்வதியும்

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோவிலில் நடந்த இன்ஸ்டன்ட் வைத்து ராகினி குழப்பத்தில் இருக்கிறார் அர்ஜுனுக்கு சொத்தை எழுதி வைத்தால் அர்ஜுனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ, என குழப்பத்தில் இருக்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் பாப்பா கத்துகிறது அது கூட தெரியாமல் என்ன யோசித்து கொண்டு இருக்கிறாய் என கேட்க கோவிலில் இன்னைக்கு நடந்த சம்பவம் எனக்கு பயமாய் இருக்கிறது எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அம்மா ஜோசியக்காரனை போய் பார்த்தார்களாம் சொத்தை உங்கள் மீது எழுதி வைத்தால் உங்களுக்கு பெரிய கண்டம் இருப்பதாக கூறி விட்டார்களாம் அதனால்தான் பயமாக இருக்கிறது எனக் கூற இதெல்லாம் நீ நம்பிக் கொண்டிருக்கிறாயா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் குடும்பம் இதெல்லாம் உங்க வீட்டோட வேலையா இருக்கும் அவங்க தான் சொத்தை எழுதி தர கூடாதுன்னு இப்படி சொல்லி இருப்பாங்க என்ன பேசுகிறார்.

ஜோசியக்காரரை போய் பார்த்து விடலாம் என தனக்கு தெரிந்த ஜோசியக்காரரை வைத்து காரியத்தை முடிக்கலாம் என முடிவு செய்து ராகினியை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அங்கு ஜோசியக்காரருக்கு பணத்தை கொடுத்து உங்கள் பேரில் சொத்தை எழுதி வைத்தால் அது பல மடங்கு அதிகரிக்கும் என கூறி  விடுகிறார் இதனால் ராகினி சந்தோஷத்தில் இருக்கிறார்.

அடுத்த காட்சியில் நமச்சியை வழி மறைத்து நீங்க என்ன பிளான் போட்டாலும் அது நடக்காது சொத்து முழுசா என் பெயருக்கு எழுதி மாத்துவேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கோவிலில் நடந்த அனைத்திற்கும் காரணம் நீங்க தான் எனக்கு நல்லாவே தெரியும் என பேசுகிறார் இதனை நமச்சி தமிழிடம் போய் சொல்கிறார் உடனே இருவரும் ப்ளான் போடுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் மற்றொரு பக்கம் தமிழ் எப்படி இருந்தாலும் விடமாட்டான் ஏதாவது பிளான் பண்ணுவோம் அதுக்கு முன்னாடியே நம்ம பிளான் பண்ணனும் என பிளான் செய்து தனக்குத் தெரிந்த ஒரு நபரை தன் மீது ஸ்பேனரை எடுத்து போடும்மாறு கூறிவிடுகிறார் அவரும் அதே போல் போட்டு தமிழ் தான் போட சொன்னார் என தமிழ் மீது பழியை போடுகிறார்.

இதனை ராகினிடம் சொல்லி ராகினி அழைத்துக்கொண்டு தமிழ் வீட்டிற்கு வந்து சொத்துக்காக என் புருஷனையே கொள்ளை பாக்குறீங்களா என கேட்கிறார் அப்பொழுது மேலிருந்து ஸ்பேனரை போட்ட நபரை அழைத்துக் கொண்டு இவர்தான் போட சொன்னார் என சொல்ல அனைவரும் முழிக்கிறார்கள். நமச்சி தான் பணம் கொடுத்து போட சொன்னார் ஆனால் தமிழ் தான் இது மாதிரி செய்ய சொன்னார் என கூறி விடுகிறார்.

இதனால் தமிழை ராகினி திட்டிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் சந்தோஷத்தில் மிதக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.