காணாமல் போன அர்ஜுன்.. தமிழ் மீது விழுந்த பழி.. நாடகமாடும் பரமு.! ராகினி உங்கள நம்ப வைக்க தான்இவ்வளவு சித்து வேலையும்…

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பரமு தமிழ் ஆர்டர் எடுக்க வேண்டிய கம்பெனிக்கு சென்று கொட்டேஷன் கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் என்ன விலை கோட் பண்றாரோ அதைவிட கம்மியாவே நாங்க பண்ணி தரோம் என பேசுகிறார் அதனால் அர்ஜுனுக்கு இந்த ஆர்டரை கொடுத்து விடலாம் என டைரக்டர் யோசிக்கிறார். அதே கம்பெனிக்கு தான் தமிழ் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் மேனேஜர் நீங்கள் இங்கு வர வேண்டாம் இந்த ஆர்டரை அர்ஜுனுக்கு கொடுக்க டைரக்டர் யோசிக்கிறார் எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பரமு இங்க வந்திருந்தான் என கூறியவுடன் தமிழ் அவன் ஃபிராடு அவனை எதுக்கு உள்ள விட்டீங்க அவன் ஏகப்பட்ட தொல்லை கொடுப்பான் என பேசுகிறார். உடனே அந்த மேனேஜர் உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆர்டரை அவர்களுக்கு கொடுக்க சொல்லி கேட்டுட்டு போறான் என பேசுகிறார் உடனே கார்த்தி மற்றும் தமிழ் இருவரும் அர்ஜுன் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்று பரமுவிடம் நான் எடுக்க வேண்டிய கம்பெனியில் ஆர்டர் கேட்டு பிச்சை எடுக்கிறியா என பரமுவை பார்த்து கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆர்டர் எங்களுக்கு இல்லனா எங்க ஒர்க்கர்ஸ் ஓட நிலைமை என்ன ஆகிறது இந்த ஆர்டர் கிடைக்க நான் என்ன வேணாலும் செய்வேன் என தமிழ் திட்டவட்டமாக கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உன் புருஷனை ஒழுங்கா இருந்துக்க சொல்லு எல்லா நேரத்திலையும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் ஏதோ நீ வந்து கெஞ்சி கேட்டதால் தான் அந்த ஆர்டர் கொடுத்தேன் உனக்காக மட்டும் தான் செஞ்சேன் என கூறுகிறார்.

பிறகு அர்ஜுன் குடும்பம் ராகினியிடம் ஏற்றி விடுகிறார் அது மட்டுமில்லாமல் அர்ஜுன் ஏதாவது செஞ்சுருவானோ உங்க அண்ணா என பேசுகிறார்கள் தமிழன்னா அப்படிப்பட்ட ஆளே கிடையாது என பேசுகிறார். இந்த நிலையில் கார்த்தி மற்றும் தமிழ் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறுகிறார்கள் உடனே அர்ஜுனனை திட்டுகிறார்கள் கார்த்தி மிகவும் கோபப்படுகிறார். அப்ப இந்த ஆர்டர் நமக்கு கிடைக்கலைன்னா என்ன பண்றது என கேட்க அதற்கு தமிழ் இந்த ஆர்டர் கண்டிப்பா கிடைக்கும் அப்படி கிடைக்கலன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் தங்கச்சி ராகினி  பத்தி எல்லாம் யோசிக்க முடியாது என பேசுகிறார்.

அடுத்த நாள் டெண்டர் விடுகிறார்கள் அங்கு தமிழ் சென்றுள்ளார் ஆனால் அர்ஜுன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. ஆனாலும் அர்ஜுனுக்கு போன் பண்ணி பார்க்கிறார்கள் போன் அட்டென்ட் பண்ணவில்லை மேலும் அர்ஜுனுக்கு தான் இந்த ஆர்டரை கொடுக்கப் போகிறோம் குறைவான கொட்டேஷன் கொடுத்துள்ளார் என பேசுகிறார். அதற்கு தமிழ் அவங்க குறைவான கொட்டேஷன் கொடுத்ததால் குவாலிட்டி இருக்காது என திட்டவட்டமாக கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அவங்க எனக்கு ஆர்டர் கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள் என பேசுகிறார்.

மேலும் அர்ஜுன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் இந்த கொட்டேஷனுக்கு தகுதியான நபர் தமிழ் தான் அவரிடமே இந்த ஆடரை கொடுக்கிறோம் எனக் கூறி விடுகிறார்கள் தமிழும் சந்தோஷமாக வெளியே வருகிறார் நேர்மைக்கும் உண்மைக்கும் என்னைக்கும் அழிவு இல்லை என்பது போல் பேசிவிட்டு செல்கிறார். ஆனால் அங்கு பரமு அர்ஜுன் எங்கே அதனாலதான் இந்த ஆர்டர் கைமீறி  போனது அர்ஜுன் ஏன் டெண்டர் எடுக்க வரவில்லை என பேசுகிறார் பரமு அதற்கு ராகினி அர்ஜுன் ஆர்டர் எடுக்க வருவதாக கூறினார் இப்ப என்ன சுவிட்ச் ஆப்னு வருது என பதட்டத்தில் இருக்கிறார் உடனே அர்ஜுனனின் அக்கா ஐயையோ இந்த தமிழ் தான் ஏதாவது பண்ணியிருப்பான் என பேச ஆரம்பித்துவிட்டார் இத்துடன்  இன்றைய எபிசோடு முடிகிறது