மருமகளுக்காக மகளிடம் சண்டை போடும் கோதை.! அர்ஜுன் போட்ட திட்டம் சந்தேகத்தில் நடேசன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.!

Thamizhum Saraswathiyum: தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி கோவிலுக்கு வந்துள்ளார்கள் அங்கு தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அந்த சமயத்தில் கோதை மற்றும் நடேசன் கோவிலுக்கு வருகிறார்கள். இவர்கள் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விடுகிறார்கள் உடனே சரஸ்வதி நடேசனை பார்க்க நீங்க எப்ப மாமா இங்கே என கேட்கிறார். கோதை கோவிலுக்கு போகலாம் என கூறினார் அதற்காக தான் வந்தோம் என்று கூறுகிறார் நடேசன்.

உடனே சரஸ்வதி அத்தை எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க அதுக்கு ரொம்ப நன்றி என்பது போல் பேச அந்த இடத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் நான் அப்படிதான் பேசுவேன் என கூறுகிறார் கோதை மேலும் மத்தவங்க சொல்றாங்க என்பதற்காக நீங்க ஏன் வருத்தப்படணும் கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கோதை சரஸ்வதிக்கு ஆறுதல் கூறுகிறார். உடனே தமிழ் சரஸ்வதியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.

வீட்டிற்கு வந்த கோதையிடம்  ராகினி நீங்க ஏமா அப்படி செஞ்சீங்க யாராவது எங்கையாவது அசிங்கப்படுறாங்க உனக்கு என்ன என ராகினி வாய்க்கு வந்தபடி பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அவர் செய்த பாவம்தான் அவருக்கு குழந்தை இல்லை என்பதை சாபமாக பேசுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் அம்மா அதே போல் கூர உடனே நடேசன் உங்களுக்கும் இதே மாதிரி ஒரு பொண்ணு இருக்கு மறந்துட்டீங்களா சம்மந்தி என குத்தி காட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராகினியை கோதை திட்டுகிறார் நடேசன் வசு என அனைவரும் ராகினியை திட்டுகிறார்கள். பிறகு ராகினி மாடிக்கு செல்கிறார். கோதை வசுவிடம் சரஸ்வதிக்கு போன் செய்து எங்க போனாங்கன்னு கேளு அவங்க வேகவேகமாக எங்கேயோ போனாங்க எனக் கூற உடனே வசு போன் செய்து எங்க போனீங்க என கேட்கிறார் ஹாஸ்பிடலுக்கு தான் வந்தோம் என கூறுகிறார். வசுவும் உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் எதற்காகவும் வருத்தப்படாதீர்கள் என ஆறுதல் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ராகினிடம் அனைவரும் ஏற்றி விடுகிறார்கள் அப்பொழுது ராகினி அப்பவிர்க்காக பங்ஷன் செய்யலாம் என்று நினைத்தேன் இப்படி பேசுகிறார்கள் இவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என ராகினி பேசுகிறார் ஆனால் அர்ஜுன் எதுவும் புது திட்டம் போட்டு விட்டு இல்ல பங்க்ஷன் செய்றோம் அறுபதாவது கல்யாணம் பண்றோம் என பேசிக்கொண்டு கீழே வந்து கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் கூறுகிறார்கள்.

ஆனால் அர்ஜுன் தான் ஏதோ திட்டம் போட்டு இருக்கிறார் என கோதை மற்றும் நடேசன் கண்டுபிடித்து விடுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது

Leave a Comment

Exit mobile version