தமிழைப் போட்டு தள்ளி அந்த பழியை தூக்கி மேக்னா மீது போட போகும் அர்ஜுன் மற்றும் கலிவரதன்.! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum january 25 episode : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் குடும்பத்தில் நடந்த அனைத்தையும் சரஸ்வதி மற்றும் தமிழ் கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த அர்ஜுனையும் மாட்டிவிட வேண்டியது தானே எனக் கூற ஆனால் தமிழ் தான் வேண்டாம் என்று சொல்லிட்டாரு என சரஸ்வதி கூறுகிறார்.

அதன் பிறகு மேகனாவிடம் இருப்பவர்கள் அனைவரும் தப்பானவர்கள் அதனால் தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார் எனக் கூற அவருடைய மாமாவும் இதுக்கு உடந்தை தான் என பேச ஏனென்றால் கல்யாணம் ஆனதை உமாபதி சார் அவர்களிடம் கூறிவிட்டார் ஆனால் அவர் ஏன் மேகனாவிடம் மறைத்துள்ளார் என்று தெரியவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்த பொரியல் மட்டன் சுக்கா என உளறி கொட்டிய கறிக்கடை பாய்.! வசமாக சிக்கிய ரோகிணி.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

அடுத்த காட்சியில் மேகனா தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது மேகனாவின் வேலைக்கார அம்மா தமிழை எதுவும் செய்ய வேண்டாம் அது நமக்கு தான் பாவத்தை வந்து சேர்க்கும் அவ வேற புள்ள தாசியாக இருக்கா இந்த பாவம் நமக்கு எதுக்கு கம்பெனிய பழி வாங்கணும்னு நினைச்சது கரெக்ட்டு தான் ஆனா ஒரு உசுரு எடுப்பதெல்லாம் மிகப்பெரிய தப்பு என அவருக்கு புரிய வைக்கிறார் உடனே மேகனா நான் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துட்டேன் எனக்கு இப்பதான் புரியுது தெரியுமா நான் சொல்லிடுறேன் என இருவரும் போகிறார்கள்.

உடனே தன்னுடைய மாமாவை கூப்பிட்டு தமிழை எதுவும் செய்ய வேண்டாம் எனக் கூற அதற்கு இல்ல அவனை முடிச்சிடலாம் அப்பதானே பட்டா அசிங்கத்துக்கெல்லாம் நல்லது எனக் கூற திட்டாவட்டமாக  மேகனா எதுவும் பண்ண கூடாது என கூறிவிடுகிறார் இதனால் கலிவரதன் அர்ஜுனனை சந்திக்க போகிறார் அர்ஜுனன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் எப்படியாவது அந்த தமிழை முடிச்சாகணும் அப்பதான் எனக்கு மேகனாவின் சொத்து வரும் உங்களுக்கு தமிழ் ஒழிஞ்சிடுவான் இந்த பழியை தூக்கி மேகனா மீது போட்டு விடலாம் என திட்டம் போடுகிறார்கள்.

சாய் பல்லவியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் புகைப்படங்கள்.

அடுத்த காட்சியில் நமச்சி சரஸ்வதி வீட்டிற்கு வருகிறார் நான் தமிழ் உடைய நல்லதுக்காக தான் இப்படி செஞ்சன் ஆனா இப்படி ஆகும் என்று எனக்கு தெரியாது எனக் கூறுகிறார். ஆனாலும் நமச்சியை  அனைவரும் திட்டுகிறார்கள் சரஸ்வதியும் உன்ன  அண்ணனா நினைச்சென் நீங்க இப்படி செய்வீங்கன்னு நினைச்சு கூட பார்க்கல என திட்டுகிறார் அந்த சமயத்தில் தமிழ் வருகிறார் நீ எதுக்குடா இங்கு வந்த துரோகி என பேசுகிறார்.

நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நினைச்சேன் ஆனா இப்படி நடக்கணும்னு தெரியல தமிழ் நான் எங்க போவேன் என நாயை போல் கெஞ்சுகிறார் ஆனால் தமிழ் என் கண்ணுலையே தென்படக்கூடாது எங்கேயாவது போய் தொலை என பேசுகிறார் அந்த சமயத்தில் நமச்சி போறன் ஒரேடியா போய் சேர்ந்துடுறேன் என பேசிவிட்டு வெளியே செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version