தமிழை அழிக்க நீங்கதான் பிளான் பண்ணுனீங்களா.. முதன்முறையாக அர்ஜுன் மீது ராகினிக்கு வந்த சந்தேகம்.!

thamizhum saraswathiyum january 11 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் குடும்பமே மேகனாவை கம்பெனி திறப்பு விழாவிற்கு கூப்பிட சென்றுள்ளார்கள் அப்பொழுது மாறி மாறி பேசிக் கொண்டிருக்கும் பொழுது உனக்கு பெரிய மனசு இந்த மாதிரி யாரும் செய்ய மாட்டாங்க உங்களுடைய பெயர் டேமேஜ் ஆனாலும் பரவாயில்லை என தமிழுக்காக ஜெயிலுக்கு போனீங்க என பேசுகிறார்கள்.

உடனே மேக்னா என்னோட தமிழுக்காக தானே இதெல்லாம் அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது தமிழ் ஜெயிலுக்குள்ள போயிருந்தா தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன் ஆனா இப்போ எனக்கு சந்தோசம் தான் என பேசுகிறார்கள் இந்த சமயத்தில் மேகனா ஒவ்வொன்றையும் தவறாக புரிந்து கொள்கிறார் அது மட்டும் இல்லாமல் நடேசன் அவன் எப்ப பார்த்தாலும் என் தேவதை என் தேவதைன்னு சொல்லுவான் என பேச அதற்கு மேகனா அங்கேயும் அப்படித்தானா என கூறுகிறார்.

இதனால் மேக்னா தமிழ் மீது இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறார் என சரஸ்வதி புரிந்து கொண்டு கோபப்படுகிறார் உடனே நமச்சி எங்க உண்மை தெரிந்துவிடுமோ என கம்பெனியில் வேலை இருக்கு உடனே கிளம்பலாம் என கூறிவிட்டு கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் அர்ஜுன் குடும்பம் ஜெயிலில் இருக்கும் பரமுவை பார்க்கப் போகிறார்கள் அப்பொழுது அர்ஜுனுக்காக நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கேன் எனக்கு நீங்க சிலையை வைக்கலாம் என பேசுகிறார் பரமு.

ஜெயிலில் இருந்தும் வாய் குறையவில்லை என அவரின் மனைவி பேச உடனே அர்ஜுன் இந்த முறை தமிழ் கண்டிப்பா சிக்குவான் அவனை மொத்தமா ஒழுச்சி கட்டுகிறேன் என கூறுகிறார் அதுக்கு என்னிடம் ஒரு பிளான் இருக்கு எனவும் சொல்லுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி தமிழிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் மேகனா என்னுடைய தமிழ் என்று சொன்னது உங்களுக்கு தப்பா தெரியலையா எனக் கேட்க நீயா இப்படி பேசுற என சரஸ்வதி திட்டி விட்டு செல்கிறார்.

அடுத்த காட்சியில் நமசி இடம் சரஸ்வதி புலம்ப நமச்சிக்கு அனைத்தும் புரிகிறது பங்க்ஷன் முடிந்ததும் நாமலே அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடலாம் என நமச்சி மனசுக்குள் நினைக்கிறார். அடுத்த காட்சியில் ராகினி அர்ஜுனிடம் கேள்வி கேட்கிறார் அனால் மாமா  இதெல்லாம் எதற்காக செய்தார் என்று தெரியவில்லை என பரமு மேல் பழியை போடுகிறார்  உடனே அபி இது உங்க மாமா தனியா செய்ற விஷயமே கிடையாது இதுக்கு பின்னாடி எல்லா விஷயமும் தெரிஞ்ச உங்க பையன் தான் இருக்கான் என அர்ஜுனை கோர்த்து விடுகிறார்.

உடனே ராகினி எனக்கும் சந்தேகம் இருக்கு அவர் இதெல்லாம் தனியா செய்ற ஆளே கிடையாது இதுக்கு முன்னாடி உங்க மேல பொருளை தள்ளிவிட்டபோ தமிழ் மேல பழியை போட்டீங்க ஆனா பொருள் தள்ளிவிட்டவர் உங்க மாமா தான் செஞ்சாருன்னு சொல்ல வச்சீங்க இப்ப எப்படி உங்களை நம்புறது கண்டிப்பா இதுல எனக்கு பெரிய சந்தேகம் இருக்கிறது என கூறி விடுகிறார்.

இதனால் அர்ஜுனன் குடும்பம் ஆட்டம் கண்டு நிற்கிறது அடுத்த காட்சியில் கம்பெனி ஓப்பனுக்கு அனைவரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் நடேசன் கோதை என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தமிழ் எல்லாத்துக்கும் காரணம் மேக்னாதான் அவர்களால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன் என பேசுகிறார் இத்துடன் இந்த எபிசோடு முடிகிறது.