தாமரைச்செல்வி கூறியது குறித்து அவரின் மாமியார் பரபரப்பு பேட்டி.! அவர் கணவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக நமிதா மாரிமுத்து பாதியிலேயே வெளியே சென்றார்.

அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. அதேபோல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் அந்தவகையில் புதுமுகமாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தாமரைச்செல்வி இவர் ஒரு மேடை நாடகக் கலைஞர். இவர் தன்னுடைய வெள்ளந்தியான பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

மேலும் இந்த வார தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்துவந்த பாதை என்ற டாஸ்கில் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் வாழ்க்கையில் மேலே வந்த பாதையையும் கூறி வந்தார்கள். அதேபோல் தாமரைச்செல்வி அவர்களும் தன்னுடைய கணவரால் அனுபவித்த கஷ்டங்களையும் வறுமையால் சிறு வயதிலேயே நாடக  குழுவில் சேர்ந்தது குறித்து கூறினார்.

இந்த நிலையில் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் பின் அந்த வாழ்க்கை பிரச்சனையிள் முடியவே வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது தன்னுடைய பிள்ளைகளுக்காக நாடகத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தாமரைச்செல்வி காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவருடைய மாமியார் தன்னை மகள் போல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இப்படி தாமரைச்செல்வி கூறிய பல விஷயங்கள் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தாமரைச் செல்வியின் கணவர் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.

அப்படி இருக்கும் வகையில் தாமரைச்செல்வி பேசியது குறித்து பார்த்துவிட்டு தாமரைச் செல்வியின் கணவர் அவரின் மாமியாரும் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள் அதில் அவர்கள் கூறியதாவது இவர்கள் திருமணத்திற்கு முதலில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன் பின்பு இவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து நான் ஒப்புக் கொண்டேன் தாமரைச்செல்வி மிகவும் நல்லவர் தங்கமான பொண்ணு என்று அப்புறம்தான் தெரிந்தது.

தாமரைச்செல்வி எனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிதுடித்துப் போய்விடுவார் அவளை நான் மகள் மாதிரி பார்த்துக் கொள்வேன் அவள் அம்மா வீட்டுக்கு நாடகத்திற்கு சென்று விட்டாள் எப்பொழுது வருவார் என ஏங்கிக் கொண்டே இருக்கும் எனது மனம் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அவள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது தாமரைச் செல்வியின் மாமியார் உணர்ச்சி வசமாக பேசியுள்ளார்.

மேலும் தாமரைச்செல்வியின் கணவரும் காதல் திருமணம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் உணர்ச்சிபூர்வமாக பேசினார் தாமரைச்செல்வி கண்டிப்பாக வெற்றி பெற்று வருவார் என இருவரும் கூறியுள்ளார்கள் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment