நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்ட தளபதி விஜய்..!

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக தமிழ் சினிமா உலகில் வலம் வருகிறார். இப்பொழுது கூட தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க ஒரு சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது இருப்பினும் இதில் ஆக்ஷன் காமெடி போன்றவைகளும் இடம் பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சரத்குமாரும் அண்மையில் தெரிவித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் படப்பிடிப்பு தளத்திலிருந்து தொடர்ந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என கசிந்து வந்துள்ளது.

இதனால்  படக்குழுவையும் தாண்டி தளபதி விஜய்யை சற்று வருத்தமடையச் செய்தது தளபதி விஜய் படத்தில் தான் எந்த மாதிரியான கெட்டப்பில் நடிக்கிறார் என்பதை ஒருபோதுமே வெளிகாட்டிக் கொள்ள மாட்டார் தன்னுடைய ரசிகர்கள் வந்தாலும் கூட அந்த கெட்டப்பை கலைத்துவிட்டு பிறகு தான் போட்டோ எடுத்துக் கொள்வார்.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் லீக்காகியது அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் நடிகை ராஸ்மிகா மந்தனாவுடன் படப்பிடிப்பு தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் அந்த வீடியோ

Leave a Comment