இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய்.. அன்று ஒதுக்க பார்த்த நயன்தாரா.! அதன் பிறகு இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா.?

thalapathy vijay sivakasi movie : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த  திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிய உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது, அது மட்டும் இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது இதற்காக படக்குழு வெற்றி விழா கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதே போல் இந்த திரைப்படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் வெளியிடப் பட குழு திட்டமிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சிவகாசி, இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியானது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மிரட்டி இருந்தார்.

இயக்குனர் பேரரசு எழுதி இயக்கிய இந்த திரைப்படம் 150 திரையரங்குக்கு மேல் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது முன்னணி நடிகையாக அசின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு குத்து பாடல் இடம் பெற்றிருந்தது இந்த பாடலில் நயன்தாரா தான் நடனம் ஆடியிருந்தார்.

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தின் பாடலுக்கு நயன்தாரா நடனமாட மறுத்தார் அதற்கு காரணம் நயன்தாரா அந்த சமயத்தில் ஐயா திரைப்படத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்று வைத்திருந்தார் இதனால் குத்து பாடலுக்கு நடனம் ஆடினால் தன்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என எண்ணினார். அதேபோல் குத்து பாடல் ஐட்டம் பாடலாக இருக்கும் எனவும் நினைத்துக் கொண்டாராம்.

பிறகு இயக்குனர் பேரரசு நடிகை நயன்தாரா அவர்களை நேரில் சந்தித்து படத்தின் கதையை கூறி கதைக்கு முக்கியத்துவமான அந்த பாடலின் முக்கியத்துவத்தையும் கூறி நடிக்க சம்மதம் வாங்கினார். அதுமட்டுமில்லாமல் கோடம்பாக்கம் ஏரியா என்ற தொடங்கும் அந்த பாடலில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி தான் கூட ஆடுறேன் என வார்த்தைகளை நயன்தாரா ஆட சம்மதித்ததும் மாற்றினார்கள் என பேரரசுக்கு கூறியிருக்கிறார்.

அதன் பிறகு நயன்தாரா விஜயுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.