தளபதி விஜய் முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்தாலும், அதில் காதல், ஆக்சன், காமெடி அனைத்தும் இருக்கும் படி உருவாகி வருகிறதாம் இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை ஹைதராபாத், சென்னை பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது படப்பிடிப்பை வெகு விரைவிலேயே முடித்துவிட்டு டப்பிங் போட்டிகளை நோக்கி நகரும் என தெரிய வருகிறது மேலும் படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு படம் வெளியாகுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.விஜய் பெரும்பாலும் தனது காட்சிகள் முடித்து விட்டால் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்பொழுது அவர் வாரிசு ஷூட்டிங் முடித்த பிறகு ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
அந்த புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் கையில் இருக்கும் அந்த குழந்தையை வேறு யாரும் அல்ல தயாரிப்பாளர் தில் ராஜு குழந்தையாம்.. தனது குடும்பத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார் அப்பொழுது குழந்தையையும் தூக்கி வந்துள்ளனர் அந்த குழந்தைகள் தான் தளபதி கொஞ்சி விளையாடியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை…