தளபதி விஜயின் 28 வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக தற்போது நடந்த சோகம்!! கவலையில் ரசிகர்கள்..

thalapathy vijay cinema field: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்,வாழ்க்கையில் கிட்டத்தட்ட 28 வருடம் சினிமா துறைக்காக பணியாற்றியுள்ளார். இருப்பினும் இத்தனை வருடத்தில் முதல் முதலாக தளபதிக்கு நேர்ந்த சோகம்.

சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக உள்ளார். அதற்குக் காரணம் அவர் ஆரம்பத்தில் பட்ட அவமானமும் அதன் பின் அவர் படைத்த பல வரலாறும் தான் காரணம். தனக்கு வந்த சோதனைகளைத் தவிர்த்து தற்போது சினிமா துறையில் பல சாதனைகளை முறியடித்து வருபவர் தான் தளபதி விஜய்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு விஜய் கேரியரில் மோசமான வருடமாகும். இதுவரை விஜய் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு 5 படங்கள் மட்டுமே வெளியானது அதுவும் 1996ம் ஆண்டு மட்டுமே. ஆனால் 2020ஆம் ஆண்டு ஒரு படம் கூட வெளியிடாமல் உள்ளார்.

குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு படமாவது வெளியிடும் தளபதி விஜய், இந்த வருடம் மிகவும் மோசமாக அமைந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு இரண்டு படங்களில் வெளியிட போவதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment