தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். மேலும் படத்தில் யோகி பாபு சரத்குமார் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபு இணைந்துள்ளதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் தற்போது பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் இணைந்து உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு பிரகாஷ்ராஜ் இதற்கு முன்பு போக்கிரி மற்றும் வில்லு ஆகிய திரை படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது மீண்டும் 12 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் தளபதி 66 திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என பலரும் கூறி வருகிறார்கள்.
பிரபு மற்றும் ஜெயசுதா ஆகிய இருவரும் ராஷ்மிகா வின் அம்மா அப்பாவாக நடிக்க இருப்பதாகவும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுவது அதேபோல் விஜய்யின் மற்றொரு சகோதரராக பிரகாஷ்ராஜ் மற்றும் ஷாம் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பபாங்கான கதையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் படத்தை அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக திரையரங்கில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் இந்த பொங்கல் தளபதி பொங்கல் என உற்சாகத்தில் இருக்கிறார்கள்.