அன்று பேசிய பேச்சால் இன்றுவரை இரண்டு பிரபலங்களை ஒதுக்கி வைத்த தளபதி விஜய்..! யார்ன்னு தெரிஞ்சா தூக்கிவாறிபோட்டுடும்..!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் மன்றமே உள்ளது இதன் மூலமாக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில்தான் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மாபெரும் ஹிட்டு கொடுத்தார் இதனை தொடர்ந்து தற்போது அவருடைய 65வது திரைப்படம்  மிக விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி விஜயை பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளியாகி உள்ளது அதாவது திரை உலகில் பல பிரபலங்களுக்கு மனக்கசப்பு ஏற்படுவது வழக்கம்தான் அந்தவகையில் தளபதி விஜயுடன் மனகசப்பு ஏற்பட்ட பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம்.

மணிரத்தினம் தமிழ் சினிமாவில் பல்வேறு தத்துரூபமான திரைப்படங்களை இயக்கி ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் அந்தவகையில் தளபதி விஜய் சினிமாவில் அறிமுகமாகும் போது மணிரத்னம் மிகப்பெரிய இயக்குனராக இருந்து வந்தார்.

அப்பொழுது தளபதி என்னை வைத்து ஒரு திரைப்படம் இயக்குங்கள் என்று கேட்டிருந்தார் அதற்கு மணிரத்தினம் சுத்தமாக ஒப்புக்கொள்ளவே இல்லை. இதற்காக பல்வேறு வார்த்தைகளையும் மணிரத்தினம் விட்டுவிட்டாராம். இதன் காரணமாக தளபதி விஜய் அதன்பிறகு மணிரத்னத்துடன் இணைவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

நடிகர் நெப்போலியனுக்கும் தளபதி விஜய்க்கும் ஆரம்ப காலத்தில் இருந்து எந்த ஒரு நெருக்கம் கிடையாது ஆகையால் இவர்களுக்குள் வெறுப்பு ஏற்படவும் வாய்ப்பு இல்லை அந்த வகையில் ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நெப்போலியன் அங்கு வந்த நபர்கள் அனைவரையும் கண்டுகொள்ளாததன் காரணமாக தளபதி விஜய்யும் அவரை ஒதுக்கி விட்டார்.

ஆனால் பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் போக்கிரி என்ற திரைப்படத்தில் நடித்தபோது நெப்போலியன் அதில் நடித்து இருந்தார் ஆனால் அப்போது எந்த ஒரு ஈகோவும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தளபதிவிஜய் மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்தாராம்.

Leave a Comment