திருமணமாகி 60 நாட்களில் தூக்கில் பிணமாக தொங்கிய ஆசிரியை.! பகீர் கிளப்பும் காரணம்.

Teacher death : ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாள் என்ற கணக்கில். திருமணம் முடிந்த 60 நாட்களில் இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார், இப்படியிருக்க வேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மபிரியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து சில நாட்களில் ராஜாராம் குடும்பத்தின் சுயரூபம் தெரிய வந்துள்ளது, அவர்கள் பத்மப்ரியாயை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது, நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்ததை தொடர்ந்து பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்திருந்தார்.

அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு பின்பு சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி பத்மபிரியாவை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர், பெற்றோர் வீட்டிற்கு போன பத்மபிரியா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் இந்த நிலையில் மன அழுத்தம் அதிகமானதால் நேற்று தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் மேலும் பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது என்னுடைய தற்கொலைக்கு முழு காரணம் என்னுடைய கணவர் தான் என கூறியுள்ளார். அதன்படி அவரின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார் அதனால் அவர் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment