பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு டாட்டா காட்ட போகும் முக்கிய நடிகை – சோகத்தில் இல்லத்தரசிகள்.!

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இது பல வருடங்களாக ஒரே குடும்பத்தை மையமாக வைத்து இந்த கதைகளம் நகர்ந்து வந்தாலும் ஆனால் போர் அடிக்காமல் ஒவ்வொரு நாளும் என்டர்டைன்மென்ட்டுடனும் புது புது திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வருவதால் இன்றும் டிஆர்பி யில் டாப்பில் இருந்து வருகிறது.

இதில் நடித்து வரும் மூர்த்தி, தனம், ஜீவா, மீனா, கதிர், கண்ணன் போன்ற பல கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலம். கூட்டு குடும்பமாக பல வருடங்களாக வாழ்ந்து வந்த நான்கு அண்ணன் தம்பிகளில் கதிர் மற்றும் முல்லை சில காரணங்களால் வீட்டை விட்டு பிரிந்து தற்போது தனியாக ஹோட்டல் ஒன்றை நடத்தி  வருகின்றனர்.

ஆனால் அந்த ஹோட்டலும் எதிர்பார்த்த அளவு வருமானம் பெறவில்லை இருந்தாலும் விடாமுயற்சியுடன் கதிர் மற்றும் முல்லை இருவரும் தொடர்ந்து ஹோட்டலை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் வி ஜே சித்ரா நடித்து வந்தார்.

அவரின் மறைவுக்குப் பின்பு முல்லை கதாபாத்திரத்திற்கு காவியா என்ட்ரி கொடுத்து இவரும் சிறப்பாக நடித்து வருகிறார். இது தவிர காவியா சோசியல் மீடியாவிலும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் குடிகொண்டு வாழ்கிறார். மேலும் அவருக்கு வெள்ளித்திரையிலும் சில பட வாய்ப்புகளும் கிடைத்து நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது காவியா குறித்து வந்த தகவலின் படி காவியா இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக குறிப்பிடுகிறது. நடிகை காவியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களான ஸ்டாலின், சுஜிதா, கதிர் போன்றவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிஸ் யூ ஆல் என பதிவிட்டு உள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Leave a Comment