பாராட்டுகளை வாங்கிக் குவிக்கும் தமிழக பேருந்து நடத்துனர்.!! வைரலாகும் வீடியோ.

tamilnadu covai bus conductor doing good for passengers: இன்று தமிழகத்தில் கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனர் செய்த செயல் வீடியோவாக இணைதளத்தில் வைரலாகியதன் மூலம் பாராட்டுகளை வாங்கிக் குவிக்கிறார்.பேருந்து எடுப்பதற்கு முன் பயணிகளிடம் அவர் பேசியது.

“பேருந்தில் பயணம் செய்யும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், தமிழக அரசு புதிய பேருந்துகளை பயணிகளை நம்பியும் பயணிகளின் போக்குவரத்துக்காகவும் கொடுத்துள்ளனர். மேலும் தொலை தூரம் போகும் பயணிகளுக்கு ஏதும் சிரமம் ஏற்பட்டால் உடனே தெரிவித்தால் பேருந்தை நிறுத்த வேண்டுமென்றால் தாராளமாக நிறுத்துகிறோம். மேலும் அது மட்டுமல்லாமல் பயணம் செய்யும் ஊரின் கட்டணத்தையும் தெளிவாக சொல்கிறாராம்.”

மேலும் உங்களது பயணம் சரியாக விதத்தில் அமைய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய எங்களுடைய வாழ்த்துக்கள் என்று மக்களிடம் பேசினார். இவர் செய்த இந்தக் காரியம் இப்படி ஒரு நடத்துனரா என பாராட்டும் விதத்தில் அமைந்தது.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனைப் பார்த்த பல்வேறு துறையினறும் நடத்துனரின் இந்த செயலை கண்டு ட்விட்டரில் பாராட்டிய  வண்ணம் உள்ளனர். தற்போது திமுக கட்சியின் எம்எல்ஏ பதவியில் இருக்கும் டிஆர்பி ராஜா அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் டிரைவர் சதாசிவம் மற்றும் கண்டக்டர் சண்முகத்தை பாராட்டி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

Leave a Comment