தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்,.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்ட வந்தது இது நாளை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி பிரதமர் மோடி நேற்று முன்தினம் முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்பொழுது ஊரடங்கு வருகின்ற முப்பதாம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்டார்கள் இதன் தொடர்ச்சியாக ஒடிசா, பஞ்சாப் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் அனைவரும் அறிவித்துவிட்டனர்.

அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்போம் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே நாளை பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment