இந்த முறை குறி தப்பாது என மீண்டும் மோதும் அஜித் விஜய்.! இடையில் புகுந்து ஆட்டத்தை கலைக்க பார்க்கும் சிவகார்த்திகேயன்.!

பொதுவாக ஒரு பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே திரையரங்கில் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வார்கள் அதனை காண மக்கள் கூட்டம் அலைமோதும். புது திரைப்படத்தை காணுவதற்காகவே பல மக்களும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் தற்பொழுது அந்த நிலைமை மாறிவிட்டது பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே தற்பொழுது வரிசை கட்டிக்கொண்டு திரைப்படங்கள் வெளியாகிறது ஆனால் அனைத்து திரைப்படங்களையும் மக்களால் பார்க்க முடியவில்லை.

அதற்குக் காரணம் ஒரே நாளில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது தான். பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே ஒரு சில மக்கள் தொலைக்காட்சியில் என்ன திரைப்படம் ஒளிபரப்ப போகிறார்கள் நாம் அந்த திரைப்படத்தை பார்த்து விட்டோமா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு எந்த திரைப்படத்தை பார்க்கலாம் என முடிவெடுப்பார்கள். இப்படி பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் பலரும் வீட்டிலேயே இருந்து நேரத்தை செலவிடுவார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய திரைப்படங்களை ஒலிபரப்பி தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதிலும் இல்லத்தரசிகள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்து தொலைக்காட்சியிலேயே படத்தைப் பார்த்து கண்டு மகிழ்வார்கள்.

இப்படி பண்டிகை நாட்களில் மட்டும் தான் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிகிறது அதனால் பண்டிகை நாட்களில் அனைத்து சேனல்களின் டிஆர்பியும் எகிர வைக்கிறது ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது திரைப்படங்களை ஒளிபரப்பி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு எடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அஜித்துடன் போட்டி போடுவதற்காகவே வாரிசு திரைப்படத்தை களம் இருக்கப் போகிறார்கள் என தெரிய வருகிறது ஏனென்றால் அஜித்தின் திரைப்படத்தை ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சி வாங்கிவிட்டது அதன் வெளியிட்டு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியதால் கண்டிப்பாக ஒளிபரப்புவார்கள் என எண்ணிக்கொண்டு தற்பொழுது வாரிசு திரைப்படத்தை களம் இறக்க இருக்கிறது சன் தொலைக்காட்சி.

சன் தொலைக்காட்சி பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை சன் தொலைக்காட்சி என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது என்னதான் எந்த சேனல் எந்த நிகழ்ச்சி போட்டாலும் சன் தொலைக்காட்சியை காண ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது இந்த நிலையில் சன தொலைக்காட்சியில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தினை மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறது.

அதேபோல் ரசிகர்கள் மத்தியிலும் விஜய் தொலைக்காட்சியில் பிரிண்ட்ஸ் திரைப்படமும் செம்பி திரைப்படம் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியில் சர்தார் திரைப்படம் கட்டா குஸ்தி   ஜீ தமிழில் பொம்மை நாயகி திரைப்படமும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள். அதனால் இந்த தமிழ் புத்தாண்டை மக்கள் விமர்சையாக கொண்டாடவும் பார்க்காத திரைப்படங்களை தொலைக்காட்சியில் கண்டு மகிழவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment