ப்ரியாமணிக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையா.? எல்லாத்துக்கும் இவர் தான் காரணம்..!

தமிழ் திரையுலகில் முதன் முதலாக கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி.  இவர் என்னதான் இதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பருத்திவீரன் திரைப்படமானது இவருடைய வாழ்வில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியாமணி இந்த திரைப்படத்தில் பிரியாமணிக்கு கிராமத்து கதாபாத்திரமுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு தொடர்ந்து கிராமத்து கதாபாத்திரம் உள்ள திரைப்படமே கொடுத்தவரின் காரணமாக தமிழ் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு இந்திப் பக்கம் சென்று விட்டார்.

இதன் விளைவாக படிப்படியாக பட வாய்ப்பை இழந்த நமது நடிகை தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். இவ்வாறு தன்னுடைய மவுசு குறையும் பொழுது முஸ்தபா என்பவரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவருடைய கணவர் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள்.  இந்நிலையில் முஸ்தபாவின் இரண்டாவுது திருமணம் செல்லாது என்று பலர் கூறினாலும் அவருடைய குழந்தைகளுக்கு செலவுக்கு அவ்வப்பொழுது பணம் அனுப்பி கொண்டு தான் வருகிறாராம்.

ஆனால் முத்தப்பா செய்த இரண்டாவது திருமணம் செல்லாது எனவும் அவர் விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் புகார் அளித்துள்ளார்கள் இதனால் முஸ்தபா ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.

priyamani-2
priyamani-2

Leave a Comment