உருகி உருகி காதலித்து விட்டு பின்பு பிரிந்து சென்ற முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

சினிமா உலகில் படங்களில் இணைந்து நடிக்கும் பொழுது ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகளுக்கு காதல் மலர்ந்து விடும் ஆனால் அந்த காதல் திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்து விடுகிறது, அதுபோல் நமது முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் உருகி உருகி காதலித்து விட்டு பின்பு பிரிந்து சென்றவர்களை பற்றி பார்க்கலாம்.

அஜித் மற்றும் ஹீரா – தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், 90 களில் ஆரம்பத்தில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஹீரா அஜித்தின் திரைப்படமான காதல் கோட்டை திரைப்படம் முடிந்ததும் அஜீத்தும் ஹீராவும் காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியது ஆனால் இந்த காதலை இருவரும் எதிர்க்கவில்லை எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்றார்களாம், ஆனால் ஹீரா இருவரும் நண்பர்கள் மட்டுமே என கூறினார். பின்பு ஹீரா புஷ்கர் மாதவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சிம்பு மற்றும் நயன்தாரா – சிம்புவும் நயன்தாராவும் காதலித்தது ஊர் உலகத்திற்கே தெரிந்ததுதான் இவர்கள் இருவரும் வல்லவன் படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது, அதன் பின்பு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் பின்பு நயன்தாரா திருமணம் ஆன நடிகருடன் காதல் வயப்பட்டு தற்போது பிரபல இயக்குனருடன் காதலில் இருக்கிறார்.

கமல் மற்றும் கௌதமி – நடிகர் கமல் மற்றும் கௌதமி இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தனர் என்ற நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கமலை விட்டு கௌதமி பிரிய முடிவு செய்தார் இதனை அனைவருக்கும் தெரியப் படுத்தும் வகையில் தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் உறுதிப்படுத்தினார்.

சித்தார்த்-சமந்தா : சிறுவயது முதல் நட்பாக இருந்த சித்தார்த் சமந்தா ஜோடி, சினிமாவில் பிரபலமான பின்பு காதலாக கனிந்தது இருவரும் ஜோடியாக கோவிலுக்குச் சென்று பரிகாரம் எல்லாம் செய்தார்கள், அதேபோல் விளம்பரங்களில் இந்த ஜோடியை வைத்து ஸ்பெஷலாக எடுத்து பிரபலம் படுத்தினார்கள், மேலும் சித்தார்த் நடித்த படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஆனால் யார் கண்பட்டதோ என்று தெரியவில்லை ஒரு காலகட்டத்தில் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

சித்தார்த் சுருதிஹாசன் : சித்தார்த் சமந்தாவை விட்டு பிரிந்த பின்பு சுருதிஹாசன் அவர்களுடன் காதலை தொடங்கினார் ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாமலேயே சில மாதங்களாக ஒன்றாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனைப்பற்றி சுருதிஹாசனும் மறுக்கவில்லை இதை பற்றி கேட்டபொழுது அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறினார், அதேபோல் சித்தார்த் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்தார். அதன் பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் என கூறப்பட்டது.

பிரபுதேவா-நயன்தாரா : நடிகை நயன்தாரா சிம்புவை விட்டு பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் தான் பிரபுதேவா, பிரபுதேவா திருமணமானவர் என்று தெரிந்தும் நயன்தாரா மற்றும் பிரபுதேவா காதலித்தார்கள் ஆனால் பிரபுதேவாவின் மனைவி புகார் கொடுத்ததால் நயன்தாரா-பிரபுதேவா காதல் முடிவுக்கு வந்தது.

விஷால்-வரலட்சுமி : நடிகர் விஷால் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலித்தார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது ஆனால் பின்பு விஷாலுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது,.

சிம்பு-ஹன்சிகா : சிம்பு நயன்தாராவின் காதல் முறிவுக்கு பிறகு நடிகை ஹன்சிகாவை காதலிக்கிறார் ஆனால் பிரபல நடிகை ஒருவர் ஹன்சிகாவை பிரைன் வாஷ் செய்து இருவரையும் பிரித்து விட்டார் என்று கூறப்பட்டது. அதனால் சிம்பு மற்றும் ஹன்சிகா காதல் முடிவுக்கு வந்தது.

ஆண்ட்ரியா-அனிரூத் : ஆண்ட்ரியா மற்றும் அனிருத் இவர்களைப் பற்றி பேசாத மீடியாவை இருக்காது அந்த அளவு இவர்கள் இருவரும் சர்ச்சையில் சிக்கினார், ஆனால் இவர்கள் காதலித்தார்கள் என்று கூறப்பட்டது தற்போது இவர்கள் இருவரும் அவரவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள். இவர்களின் காதல் என்ன ஆனது என்று கேள்விக் குறிதான்.

Leave a Comment