உலகின் 5வது பெரிய வைரத்தை வைத்திருக்கும் தமன்னா – யார் கொடுத்தது தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

Tamanna : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் தமன்னா. இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில்  இவர் நடனமாடிய காவலா பாடல் வெளிவந்து பெரிய அளவில் ட்ரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமன்னா வெப்சீரிஸ்களிலும் அதிகம் கவனம் செலுத்து வருகிறார் அந்த வகையில் லவ் ஸ்டோரி 2 மற்றும் ஒரு சில வெப் சீரிஸ் அவர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி வலம் வரும் நடிகை தமன்னா லவ் ஸ்டோரி 2 வெப் சீரிஸ் போது விஜய் வர்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அண்மையில் தமன்னாவிடம் கேள்வி கேட்ட போது நாம் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன் ஆனால் விஜய் வர்மா உடன் பழக்கம் ஏற்படும் போது அது வித்தியாசமாக இருந்தது எனக் கூறி தனது காதலை மறைமுகமாக சொல்லி இருந்தார். இதனால் இருவரும் வெகு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன இந்த நிலையில்  தமன்னா பற்றி இன்னொரு செய்தியும் வேகம் எடுத்துள்ளது.

அதாவது தமன்னாவிடம் 5 வது மிகப் பெரிய வைரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் தமன்னா நடித்து வந்தார். சிரஞ்சீவி ஹீரோவாக நடித்த இந்த படத்தை அவரது மருமகளும், ராம்சரனின் மனைவியுமான உபாசனா ககொனிடேலா தயாரிப்பில் இருந்தார்.

அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், அனுஷ்கா செட்டி, விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து வந்தனர். இந்த ஷூட்டிங் போது தமன்னாவுக்கு பரிசாக 2 கோடி மதிப்புள்ள வைரத்தை உபாசனா ககொனிடேலா அளித்தார். இந்த வைரம் தான் உலகிலேயே 5 வது மிகப் பெரிய வைரம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமன்னா கையில் அணிந்திருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment