விஜயகாந்த் பெரிய பணக்காரன்.. சட்டை இல்லாமல் தரையில் எங்களுடன் தூங்குவான்.. சொல்லி கண்கலங்கிய சினிமா பிரபலம்

Vijayakanth : மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் முதலில் மதுரையில் ரைஸ்மில் ஒன்றை வைத்து வேலை பார்த்து வந்தார். ஆனால் சினிமாவின் மீது உள்ள காதலால் சென்னை வந்து பட வாய்ப்பு கைப்பற்றி பின் ஹீரோ அவதாரம் எடுத்து ஒரு கட்டத்தில் ரஜினி,  கமலுக்கு  அடுத்த மூன்றாவது இடத்தை விஜயகாந்த் பிடித்தார்.

சினிமாவில் எவ்வளவு பேரையும், புகழையும் சம்பாதித்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என நேர்மையாக ஓடினார் மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் காசு, சாப்பாடு போட்டு அவர்களை அழகு பார்த்தார் இதையேதான் சினிமாவிடம் செய்தார் இதனால் விஜயகாந்தை அனைவரும் கேப்டன் என செல்லமாக அழைத்தனர்.

90 களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான “மோகினி”.. பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள்

இப்படிப்பட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் எண்ட்ரி கொடுத்தார் அங்கேயும் வெற்றியை மட்டுமே கண்டு வந்த கேப்டனுக்கு திடீரென உடல் ஒத்துழைக்காததால் ஓய்வு எடுத்து வந்தார். சமீபத்தில் அவருடைய உடல் ரொம்ப மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவர்கள் விஜயகாந்தை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.

இதை கேள்விப்பட்டால் சினிமா பிரபலங்கள் பலரும் அவரைப் பற்றி பேசி வருகின்றனர் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்று ராதாரவி விஜயகாந்த் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் சினிமா ஆரம்பத்தில் நாங்கள் சட்டையில்லாமல் படுத்து கிடப்போம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருப்போம் விஜயகாந்த் பணக்காரன் தான்..

தைரியமா பேசுற.. நல்லா விவரமா இருக்க.. எப்படி இவனிடம் மாட்டுன கோபியை அசிங்கப்படுத்தும் ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஆனால் சினிமாவின் மீது கொண்ட காதலால் அவன் எங்களுடன் வந்து ஆரம்பத்தில் கஷ்டப்பட்டான் என கூறினார் அப்பொழுது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் பொழுது ரோகினி லாட்ஜ் இருந்தது அங்கு ஆந்திராக்காரர்கள் சீட்டு விளையாட வருவார்கள்..

விஜயகாந்த் அவர்களுடன் சீட்டு விளையாட்டு ஜெயித்து அந்த காசை அவன் வைத்துக்கொள்ள மாட்டான் எங்களுக்கு சாப்பாடு வாங்கி தருவான் அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன் விஜயகாந்த். அவனை இப்போ பார்க்க விடமாட்டேங்குறாங்க நான் பார்த்தால் நிஜமாலுமே அழுது விடுவேன் என ராதாரவி கூறியுள்ளார்.

Exit mobile version