இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் உடன் இணையப் போகும் தல தோனி – என்ன விஷயம் தெரியுமா.?

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இரு அணிகளும் முதலில் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது முதல் போட்டி 17 ஆம் தேதி தொடங்கியது அதில் இந்திய அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது இன்று இரண்டாவது 20 ஓவர் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது இந்த போட்டியிலும் இந்திய அணி தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வெற்றியை காண அதிகம் ஆர்வம் காட்ட ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் எம்எஸ் தோனி இந்திய அணிக்கு வருகை தர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மகேந்திர சிங் தோனி கடைசியாக 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மீண்டும் இவர் வரவிருப்பதால் ரசிகர்கள் இந்த போட்டியை மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோனி ஓய்வு எடுத்து வருகிறார் நேற்று திடீரென ராஞ்சியில் மைதானத்தில் வருகை புரிந்து அங்கு உள்ள 19 வயதிற்க்கான அணியினரை சந்தித்து அசத்தனர் மேலும் அங்குள்ள டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சென்று பார்த்துள்ளார்.

மேலும் இன்று அங்கு நடைபெறவுள்ள இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோனி காண இருப்பதாக கூறப்படுகிறது இதனால் தோனி ரசிகர்கள் தற்போது அங்கு படையெடுத்த வண்ணமே இருக்கின்றன மேலும் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களை  ஊக்கப்படுத்த தோனி அங்கு கன்ஃபார்ம் வருகை தர இருப்பதாக என கூறப்படுகிறது.

Leave a Comment