siragadikka-aasai

மொத்தமாக மாறி மீனாவிடம் பாசமாக நடந்துக் கொள்ளும் முத்து.! சிறகடிக்க ஆசை இந்த வாரம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் முத்து சொந்தமாக வைத்திருந்த காரை போலீசார் பிடித்த நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்தில் இருந்து. அதாவது முத்து பாட்டியின் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு மீனாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் மேலும் இவர்களுக்கு முதலிரவு ஏற்படும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நேரத்தில் முத்துவால் அசிங்கப்பட்ட வட்டிக்காரன் எப்படியாவது முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக முத்து காரை ஓட்டி வந்த நபரிடம் திராட்சை பழம் எனக்கூறி சரக்குகளை அனுப்பி விடுகிறார்.

இதனால் போலீசாரம் அந்த காரை பிடித்து விடுகின்றனர். எனவே இதனால் மீனா முத்து இந்த விஷயம் தெரிந்த உடன் மீண்டும் வீட்டிற்கு வர பிறகு அந்த கார் கிடைக்காமல் போய்விடுகிறது எனவே முத்து மறுபடியும் வாடகை கார் ஒன்றை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். மேலும் இதற்காக சாப்பிடுவதற்கு கூட முத்துவின் அம்மா குத்தி காட்டி வருகிறார்.

முத்து மீனாவிடம் நான் வாடகை காரை தான் முதலில் ஒட்டிக்கிட்டு இருந்த பாட்டி கொடுத்த பணத்தை வைத்து சொந்தமாக கார் வாங்கினேன் ஆனால் தற்பொழுது மீண்டும் வாடகை கார் ஓட்டும் அளவிற்கு ஆயிடுச்சு என வருத்தப்பட மீனா கவலைப்படாதீங்க சரியாயிடும் மறுபடியும் அந்த கார் நம்ம கிட்ட வந்துடும் என சமாதானப்படுத்துகிறார்.

இதற்கு முத்து நாம ஊருக்கு போகாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது என சொல்ல இப்படி பிரச்சனை இருக்கும் பொழுது உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க தான் தோணும் அதையெல்லாம் விடுங்க என கூறி சமாதானப்படுத்துகிறார். இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அலாரம் அடிக்க உடனே எழுந்து முத்து மீனாவை எழுப்புகிறார்.

என்னாச்சு என கேட்க நீ எழுந்திருச்சு வாசல் தலுச்சி கோலம் போட்ட பிறகுதான் தொழிலுக்கு போகணுமா அப்பதான் நல்லா இருக்கும்னு சொல்லி இருக்காரு என அவசர அவசரமாக எழுப்பப்பட்டு முத்துவே  தண்ணி தெளிக்கிறார். பிறகு மீனா கோலம் போட லேட்டாயிடுச்சு நானே போடுற என சொல்லிவிட்டு முத்து கோல போட்டு விட்டு செல்ல இதனை எல்லாம் பார்த்து மீனா மகிழ்ச்சி அடைகிறார் இதனை பார்த்த மீனாவின் அப்பா உன்னுடைய முகத்தில் சிரிப்பை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

SIRAGADIGGA-AASAI

எலியும் பூனையுமா இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் மாமியார், மருமகளா இது.. ஒன்னு சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ இதோ

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக இருந்த வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இதன் மூலம் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி இருப்பவர் தான் பிரியா பாலகுமாரன். இவர் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பு பிரியா பாலகுமாரன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தற்பொழுது எப்படியாவது மீனா முத்துவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் முத்துவிற்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

எனவே குத்துவை போலீசார் அரெஸ்ட் செய்து இருக்கிறார் இதனால் முத்துவை இணைத்து மீனா கவலைப்படுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தனது மாமியாருடன் நடனமாடி குத்தாட்டம் போட்ட வீடியோவை மீனா பகிர்ந்து இருக்கிறார். அதாவது சீரியலில் எலியும் பூனையுமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது இருவரும் நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனை மீனாவாக நடித்து வரும் பிரியா பாலகுமாரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தற்பொழுது மிகவும் ஃபேமஸான பாடலாக இருந்து வரும் கொடியை ஏத்தி வண்டியெல்லாம் பொள்ளாச்சி சந்தையில என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..