yuvan-sangar-raja

சாண்டி மாஸ்டருடன் வெறித்தனமாக நடனமாடிய யுவன் சங்கர் ராஜா.! வைரலாகும் வீடியோ..

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெரிதாக நடனமாடி யாரும் பார்த்திருக்க மாட்டோம் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முதன் முறையாக இவர் வெறித்தனமாக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் சிறந்தவராக யுவன் சங்கர் ராஜா திகழ்கிறார். இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் பணியாற்ற தொடங்கிய இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல பாடல்களை தந்துள்ளார். மேலும் இவர் முதன் முறையாக 1997ஆம் ஆண்டு சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அரவிந்த் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது வரையிலும் இவர் 125 பாடலுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். கிராமத்து கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி தயாரித்து இருந்தது.

இத்திரைப்படத்தில் அதிதி சங்கர்,  பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டு போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடிக்கொண்டே மிகவும் வெறித்தனமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

vijay-ajith

தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றி சுவாரசியமான தகவலை கூறிய யுவன்.! வைரலாகும் வீடியோ..

தன்னுடைய இசையினால் ஒட்டுமொத்த மக்களையும் ஆட்சி செய்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா.இவருடைய 42 வது பிறந்தநாள் நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதன் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்த யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக ட்விட்டரில் #AsKU1 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் குறித்த கேள்வி எழுப்பினார் அதற்கு இருவரையும் குறித்த சுவாரசியமான தகவலை யுவன் சங்கர் ராஜா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

அதாவது அஜீத் குமாரை பற்றி பேசிய பொழுது, இத்தனை வருடங்களாக அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான நினைவுகளாக இருக்கிறது, ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் அழைத்து பாடல்களும் பின்னணி செய்யும் சிறப்பாக உள்ளதாக பாராட்டுவார், அற்புதமான மனிதர் தனிப்பட்ட முறையில் அவரோடு பணியாற்றுவது மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களை பற்றி கேட்ட பொழுது, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் அவருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது.. இனிமையான மனிதர் அவர் திரைப்படங்கள் குறித்து நிறைய பேசுவோம் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆன சமயம் என்பதால் அது குறித்தும் பேசினார் குறிப்பாக அவரது மகன் என்னுடைய வெறித்தனமான ரசிகன் என அவர் சொன்னது என்னால் மறக்கவே முடியாது அது எனது மனதை தொட்ட ஒரு தருணம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்த யுவன் சங்கர் ராஜா தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்த சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

yuvan-shangar-raja

தன்னுடைய மகன் பிறந்த செய்தியை அழகாக கூறிய இளையராஜா.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்றால் அதற்கு முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கும் உண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தி அவர்களை மகிழ்விப்பது இசை தான். அந்த வகையில் இசை என்பது வாழ்வில் ஒரு பங்காக இருந்து வருகிறது அந்த வகையில் ஒரு சில இசமைப்பாளர்கள் ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் ராக்ஸ்டாராக இருந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையாால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென கட்டி போட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய 43வது பிறந்தநாள் முன்னிட்டு ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு யுவனின் தந்தையும் இசைஞானியுமான இளையராஜா ஒரு வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மகன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்துள்ளார் என்பதை பற்றிய தகவலை கூறியுள்ளார் அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஆழியாறு அணை அருகில் ஏதேனும் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தான் நான் அப்பொழுது இசையமைத்து இருப்பேன். அப்படி தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் இயக்குனர் மகேந்திரனுடன் ஜானி படத்திற்கு இசையமைக்க சென்றிருந்தேன் அப்பொழுது தயாரிப்பாளர் கே.ஆர்.ஜிக்கு கோவையில் வீடு இருக்கிறது. அங்கு சென்று திரும்பி வந்தார் அப்பொழுது நான் எனக்கு யுவன் பிறந்த செய்தியை அவர் கூறினார் அப்பொழுது கூட நான் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன் என யுவன் பிறந்த சமயம் நடந்த கதையை கூறி யுவன் ஹாப்பி பர்த்டே என கூறியுள்ளார்.