வீட்டிற்கான 18 லட்சத்தை கொடுக்க பழனிச்சாமியை நாடிய பாக்யா.! பாக்கியலட்சுமி இந்த வார ப்ரொமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் தொடர்ந்து இதனால் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்ட நிலையில் ராதிகாவின் அம்மா போலிசை வீட்டிற்கு அழைத்து வர அவர்கள் ராதிகாவிற்கு தான் அனைத்து உண்மையும் இருக்கிறது எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார்கள்.

அதன் பிறகு எந்த சண்டையும் பெரிதாக இல்லாமல் இருந்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை பார்ப்பதற்காக அவருடைய அம்மா மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர்கள் வீட்டிற்கு வர அவர்களுக்கு சமைக்க வேண்டும் என காதிகா பாக்யாவை கிச்சனை விட்டு வெளியில் போக சொல்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி முதல்ல நீ வந்த அப்புறம் உன் பொண்ணு வந்தா இப்ப குடும்பமே இங்க வந்துடுச்சு என கூறி சண்டை போட கடுப்பான ராதிகா ஏய் என கையை நீட்டி மரியாதை இல்லாமல் பேசி விடுகிறார்.

இதனால் பாக்கியாவும் சண்டை போட கோபி வந்தவுடன் நடந்த அனைத்தையும் ராதிகா சொல்கிறார் அப்பொழுது பாக்யா ஈஸ்வரிக்கு சாதகமாக பேச கோபி ராதிகாவிடம் கேள்வி கேட்க நீ யார் என சண்டை போடுகிறார். பிறகு உங்களுக்கு இன்னும் 18 லட்சம் தர வேண்டியது இருக்கு அது கொடுத்து விட்டால் கிளம்பிடுவீங்களா என கேட்க கோபியும் பணத்தை முதலில் கொடு அதுக்கப்புறம் பாத்துக்கலாம் என திமிராக பதில் சொல்கிறார்.

எனவே எப்படியாவது இந்த பணத்தை கோபியிடம் கொடுத்து விட வேண்டும் என பாக்யா நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற பாக்யா பழனிச்சாமியிடம் சார் நீங்க ஒரு சமையல் ஆர்டர் சொன்னீங்களே அதனை எடுத்து நடத்தலானு இருக்கேன் சார் என கூற நெஜமாவா என பழனிசாமி கேட்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்த பாக்கியா ஈஸ்வரி, ராமமூர்த்தியிடம் மூன்று நாள் 5 ஆயிரம் பேருக்கு சமைக்கணும் அத்தை என சொல்ல அதற்கு ஈஸ்வரி ஐயாயிரம் பேரா என அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பாக்யா ஆமாம் என சொல்ல ராமமூர்த்தி நீ சமைச்சிடுவியா என கேட்கிறார். எனவே பாக்கியா முதலில் நானும் முடியாதுன்னு தான் நினைச்சேன் என சொல்ல ஈஸ்வரி எங்களுக்காக ஒத்துக்கிட்டியா என கேட்கிறார். ராமமூர்த்தியும் எங்களுக்காக உன்ன வருத்திகிட்டு எதுவும் செய்யாதமா என்ன சொல்ல அதற்கு பாக்கியா அதெல்லாம் பண்ணிடலாமா நம்ம வீட்ட மறுபடியும் நம்ம வாங்கி தான் ஆகணும் மாமா என சிரித்த முகத்துடன் கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

உங்களுக்கும் காவியாக்கும் இடையில என்ன ரகசியம் இருக்கு.! இப்ப கூட எனக்கு உண்மையா இல்ல மீண்டும் பிரியப்போகும் ஜீவா மற்றும் பிரியா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ஈரமான ரோஜாவே 3 சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததால் தற்பொழுது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருவது போல பிரியாவும் ஜீவாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்.

எனவே இதனால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் தேவி செய்திருப்பது மேலும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது ஜீவா தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார் எனவே ஜீவா பல முயற்சிகளை செய்தும் பிரியா வராத காரணத்தினால் பிறகு காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரியாவை வீட்டிற்கு போகக்கூடாது என வீட்டில் இருப்பவர்கள் கூற ஜீவாவும் எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பாங்க அதே போல் தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு பிரியாவும் வீட்டில் இருக்க ஒப்புக்கொள்ள பிறகு ஜிவா சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு டாக்டர் கர்ப்பமாக இருப்பதாகவும் ட்வின்ஸ் பேபி எனவும் சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் பார்த்திபன் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அவர் மாறியவுடன் சொல்லலாம் என காவியா நினைத்த நிலையில் பிறகு யாரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து நர்ஸ் சொல்லி விடுகிறார் எனவும் காவியாவிடம் இதனை பற்றி கேட்க அதற்கு ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் ஆனால் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் நானும் பார்த்திபனம் மகிழ்ச்சியாக வாழவில்லை எனக் கூறி அழுகிறார்.

எனவே இந்த காரணத்தினால் ஜீவாவும் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் தேவி காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரிந்துக் கொண்ட நிலையில் இது ஜீவாவுக்கும் தெரியும் என போட்டு உடைக்கிறார். பார்த்திபன் காவியாவிடமிருந்து சண்டை போட ஜீவாவிடம் பிரியா சண்டை போடுகிறார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிறது எனக்கு தெரியும் அதை நீங்க ரெண்டு பேரும் சொல்லாமல் மறைத்ததும் எனக்கு தெரியும் இன்னைக்கு நானும் பார்த்திபனம் நிம்மதி இல்லாம இருக்கோம் உங்களுக்கும் காவியாக்கும் நடுவுல என்னவென்று ரகசியம் இருக்கு சொல்லுங்க என்ன சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா காவியா தான் அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்த யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னா என சொல்ல அதற்கு பிரியா இப்ப கூட நீங்க எனக் உண்மையா இல்ல காவியாவுக்கு தான் உண்மையா இருக்கீங்க எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

Exit mobile version