தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றித்திரியும் மக்களுக்காக உருக்கமான வீடியோவை வெளியிட்ட வடிவேலு.!

Vadivelu has released an awesome video: கொரோனா உலக மக்களையே மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. அதன் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 3 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பற்றிய விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோல சினிமா பிரபலங்கள் பலரும் அதனை பாட்டு பாடி மற்றும் அறிவுறுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வந்து செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. ஆனால் மக்கள் அதனை மட்டும் சரியாக பயன்படுத்தாமல் வேறு சில காரணங்களுக்காக வெளியில் சுற்றித் திரிந்து வருகிறார்கள். நோய்க்கான எதிர்வினையாற்றும் மருந்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் வெளியே சுற்றித் திரிவது நம் உயிருக்கு ஆபத்து என்பதை உணராமல் மக்கள் அலை மோதி வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தடுப்பதற்காக போலீசார், துப்புரவு பணியாளர், மருத்துவர்கள் இவர்களெல்லாம் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இசைகள் மூலம் விழிப்புணர்வை வெளிப்படுத்தி வரும் வைகை புயல் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டு காவல்துறையினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியது என்னமோ நடக்குது இங்க கடவுள் இறங்கிவிட்டான் கடவுள் எல்லோரையும் சோதிக்கின்றான் இந்த சோதனையில் அனைவரும் பாஸ் ஆகி விட வேண்டும் போலீசார் வேண்டும் என்று எல்லோரையும் அடிக்கவில்லை அடித்தால்தான் மக்கள் கேட்பார்கள் என்று தான் அடிக்கிறார்கள் என கூறியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.

இதோ அந்த வீடியோ .

https://twitter.com/VadiveluOffl/status/1254802312507224065

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.! அடிதிரடி வீடியோவை வெளியிட்ட வடிவேலு!!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல காமெடி நடிகர்களுக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பதை நிரூபித்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரா வலம் வந்தவர். நடிகர் வடிவேல் அவர்கள் காமெடியனாக என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். ஆனால் அதிகாரப்பூர்வமாக 1991 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் வந்ததாக கூறப்படுகின்றன.

தொடர்ந்து அவர் காமெடிநடிகனாக பல படங்களில் நடித்து மட்டும்மில்லமால் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தன்னை சினிமா துறையிலும் முன்னணி காமெடி நடிகராக தன்னையே நிலைநிறுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார் இதனாலேதான் அவருக்கு தலைவலி ஏற்பட்டன.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு அவர்கள் நடித்து வெளிவந்த இருபத்தி மூன்றாம் புலிகேசி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து அவர் 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இப்படத்தை ஷங்கர் தான் தயாரித்திருந்தார். வடிவேலு அவர்களோ இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் முன்னணி ஹீரோக்கள் மற்றும் மிகப்பெரிய பட்டாளங்கள் இருக்கக் கூடாது எனவும் அப்படி இருந்தால் நான் அடிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் வடிவேலு அவர்களுக்கும் சங்கருக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது இதனாலையே படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

திரைப்படங்களில் வடிவேல் அவர்கள் நான் நடிக்கப் போவதில்லை எனக் கூற தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது படத்தை முடித்து தரவும் இல்லையேல் வடிவேல் ஏற்பட்டால் 9 கோடி ரூபாய் நஷ்ட தொகையை தரும்படி பட குழுவினர் புகார் அளித்தனர் ஆனால் பணத்தை திரும்ப தர மறுத்ததால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது. அவரை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகர் என வடிவேலை காணாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் மீம்களில் தற்பொழுதும் ராஜாவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகி நாளும் என்னை மறக்காமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு வணக்கம் என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய்விட்டது. தற்போது ஒரு புதிய ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து உள்ளார் மட்டுமில்லாமல் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

https://twitter.com/VadiveluOffl/status/1240964109304127490

Exit mobile version