thamizhum sarasvathiyum

தமிழ் கம்பேனியை திறக்க விடக்கூடாது என அர்ஜுன் செய்த சம்பவம்.! கடைசியில் உதவிய நபர்.. கடை திறப்பு விழாவிற்கு வந்த சரஸ்வதி.. பெயர் என்னவா இருக்கும்.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஒளிபரப்பாகி வரும் சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

பல பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தை பிரிந்த தமிழ் எப்படியாவது சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். எனவே சாப்பிடுவதற்கு கூட தமிழும் சரஸ்வதியும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சரஸ்வதி தான் வேலைக்கு போவதாக கூறுகிறார் ஆனால் தமிழ் சரஸ்வதி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக புதிய கம்பெனியை தமிழ் நாளைக்கு ஓபன் செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அர்ஜுன் வழக்கம் போல் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்பெனியை திறக்க விடக்கூடாது என கூறுகிறார். அதேபோல் அந்த ஆபீஸ் வரும் நாளைக்கு கம்பெனி திறக்க முடியாது அப்படி திறந்தால் சீல் வைத்து விடுவதாக மிரட்ட இந்த நேரத்தில் மினிஸ்டர் தமிழை பார்த்து விடுகிறார்.

பிறகு அவர் ஆஃபீஸரை சந்தித்து இவர் நமக்கு வேண்டிய தம்பி எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனக் கூற உடனே அந்த ஆபிசர் சைன் போட்டு சொல்ல இதனால் அர்ஜுன் அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் கம்பெனி திறப்பு விழாவை பற்றி மினிஸ்டரிடம் கூற என்னலாம் கூப்பிட மாட்டியா என கேட்க அதற்கு கண்டிப்பாக வாங்க சார் நாளைக்கு நீங்கதான் திறந்து வைக்கிறீங்க என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த மினிஸ்டர் வரும்போது சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வரும் நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது அம்மா மேல் கோபமாக இருந்தாலும் சரஸ்வதி என்ற பெயரை வைப்பாரா? என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

serial actress

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையா இது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையினை மையமாக வைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக சின்னத்திரையாக நக்ஷ்ரா நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தங்களுடைய நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.மேலும் இந்த சீரியலில் சரஸ்வதி மற்றும் தமிழ் நடிப்பை தாண்டி தமிழின் அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரம் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த சீரியலில் இவர்களுடைய கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது இந்த சீரியலில் கோதையாக நடித்து வருபவர் தான் மலையாள நடிகை மீரா கிருஷ்ணா.இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள் மேலும் இவருடைய கணவர் நடனத்துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த மீரா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொக்கிஷம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் வசந்தி என்ற கேரக்டரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வந்தார். மேலும் இவருடைய நடிப்பு நல்ல ரீச்சை பெற்றதால் அதன் பிறகு சித்தி 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்த வந்தார் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து நடனமாடும், வீடியோக்கள் டிக் டாக் செய்யும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு கொட்டுது தன்னுடைய ஹேர் ஸ்டைல் மாற்றி செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.