sakshi-agarwal

முதன்முறையாக கடற்கரையில் நீச்சல் உடையில் துள்ளல் ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்.! இதுதான் புயலுக்கு முன்னே அமைதி என்பார்களோ.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவார்கள் அந்த வகையில் பல நடிகைகள் லிஸ்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில்  தமிழ் சினிமாவில் வளரும் நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு யோகன் அத்யாயம், திருட்டு விசிடி, க க க போ, காலா, விஸ்வாசம் குட்டி ஸ்டோரி, டெடி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அரண்மனை மூன்றாவது பாகத்திலும், சின்றால்லா என்ற திரைப்படத்திலும் ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் தான் இருந்து வந்தது அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு படவாய்ப்புகள் அமையத் தொடங்கியது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சாக்ஷி அகர்வால் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தொடர்ந்து கடற்கரையில் நீச்சல் உடையில் துள்ளல் ஆட்டம் போட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://youtu.be/pXGmUsDBbzU