neelima-tamil360newz

கடற்கரையில் நீலிமா ராணி நடன இயக்குனர் உடன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

neeelima rani : சினிமாவில் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் நீலிமாராணி.

இவர் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கிவிட்டார், இவர் சன் தொலைக்காட்சியில் வாணி ராணி சீரியல் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தவர், அதுமட்டுமில்லாமல் தாமரை, தலையணை பூக்கள், ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டே, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற சீரியலை நீலிம ரணி தயாரித்து வருகிறார்.

நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத்தான் இந்த சீரியலை தயாரித்து வருகிறார், நடிகை நீலிமா ராணி கமல் நடிப்பில் வெளியாகிய ‘தேவர்மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம் நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீரியலில் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து வருகிறார் ஏனென்றால் இவர் சதா முறைத்துக்கொண்டே பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனை இருப்பதால் இவருக்கு வில்லியாக தான் நடிப்பதற்கு அனைவரும் அழைக்கிறார்கள், இந்த நிலையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் உடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.