Demonte Colony 2 - Official Trailer

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

Demonte Colony 2 – Official Trailer : 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் டிமான்டி காலனி இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில்  ரமேஷ் திலக்,  அபிஷேக் ஜோசப், ஆனந்த் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து தான் எழுதி இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இரண்டாவது பாகத்தில் அருள்நிதி அவர்களுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

இந்த நிலையில் பட குழு படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது இரண்டு நிமிடங்கள் இடம் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரில் பல திரில்லர் காட்சிகள் இருப்பதை காண முடிகிறது அது மட்டும் இல்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திரில்லரில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த இரண்டாவது பாகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தென்னந்தெளிவாக தெரிகிறது மொத்தத்தில் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

அருண் பாண்டியனும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் தான் இதோ ட்ரெய்லர்..

அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ பட டிரைலர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது ‘திருவின் குரல்’ என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வம்சம், மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் அருள்நிதி.

தற்பொழுது இவர் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அருள் நிதியை தொடர்ந்து கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலம் அடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அருள்நிதி திருவின் குரல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு மேல் படக் குழுவினர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாறு ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதிரடியான காட்சிகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version