KAYAL

முதன்முறையாக தன்னுடைய குழந்தையின் வீடியோவை வெளியிட்ட சன் டிவி கயல் சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

தற்பொழுது கயல் சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை தன்னுடைய மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் தீபக் இவர் கயல் சீரியலில் நடித்து வரும் அபிநவ்யா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் முதன்முறையாக அந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியலான திருமணம் சீரியலில் நடித்து வந்தார்கள் இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர்கள் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் தீபக் நடித்த வந்தார்.

மேலும் இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது எனவே அடுத்தடுத்து சித்திரம் பேசுதடி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து நடிகையாவின் ஆபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பிறகு இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு சில மாதங்களில் அபிநவ்யா கர்ப்பமான நிலையில் இவருடைய வலையகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எனவே வளைகாப்பின் பொழுது தன்னுடைய கணவருடன் நடத்திய போட்டோ ஷூட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநவ்யா வெளியிட்டு இருந்தார்.

DEPAK ABINAVYA
DEPAK ABINAVYA

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய கணவர் தீபக் மகனை தூக்கி வைத்திருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு துருவன் என்ற பெயர் வைத்திருப்பதாகவும் அபிநவ்யா தெரிவித்து இருக்கிறார் எனவே ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/2p0FakHFq1k?feature=share