raja-rani

‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு டாட்டா காமித்துவிட்டு புதிய சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான பிரபலம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் பாகம் மிகவும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது பாகம் சில மாதங்களாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இந்த சீரியலில் இருந்து விலகி வேறு ஒரு சீரியலில் நடித்திருக்கும் நிலையில் அந்த நடிகை நடித்திருக்கும் புதிய சீரியலின் ப்ரொமோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  அதாவது ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக திருமணம் சீரியல் புகழ் சித்து இருவரும் நடித்து வந்தனர்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடர்ந்து அவரால் சீரியலில் நடிக்க முடியவில்லை எனவே சில மாதங்கள் கழித்து இந்த சீரியலில் இருந்து விலகி நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரியாவும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார்.

எனவே சந்தியா கதாபாத்திரத்தில் கோகுலத்தில் சீரியல் மூலம் பிரபலமான ஆஷா கௌவுடா நடித்து வருகிறார். இவ்வாறு சந்தியா கதாபாத்திரம் இரண்டு முறை மாற்றப்பட்டிருக்கும் நிலையில் இதனை எடுத்து தற்பொழுது பார்வதி கதாபாத்திரத்தில் சரவணனின் தங்கையாக நடித்து வந்த நடிகையும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி மற்றொரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

ஆம், அதாவது பொன்னி என்ற சீரியலில் நடித்து இருக்கும் நிலையில் அந்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் தாயை இழந்த ஒரு பெண் தன்னுடைய தந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். பிறகு அந்த தந்தை தன்னுடைய பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க நினைக்க அப்பொழுது ஊரில் இருப்பவர்கள் யாரும் உதவவில்லை எனவே அவரே திருமண அலங்காரங்களை செய்ய பிறகு ஒரு சமயத்தில் கீழே விழ பொன்னி அவரை உட்கார வைத்து விட்டு அனைத்து வேலைகளையும் செய்கிறார். இவ்வாறு அப்பா மகளுக்கு இடையே இருக்கும் பாச உறவினை மையமாக வைத்திருந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.