ரச்சிதாவிடம் கெடைச்ச கேப்பில் கேடா வெட்டும் ராபர்ட்.! கிஃப்ட்டை திருப்பி அனுப்பிய இளம் காதலி.! பிரேக்கப் பயத்தில் ராபர்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரட்சிதாவின் மீது காதல் வலையை வீசி வரும் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களிடம் பெரிதும் கடுப்பினை சம்பாதித்து வருகிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 41வது நாள் கடந்துள்ள நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

முந்தைய சீசர்களை விட இந்த சீசன் போட்டியாளர்கள் பெரிதும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து ரட்சிதாவிடம் க்லோசாக பழகி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரட்சிதாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடந்தையாக இருந்து வருகிறார் என்பதுதான் உண்மை. அதாவது ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்வதை தவறு என்று தெரிந்தும் ரட்சிதாவும் அவரிடம் வழிந்து வழிந்து பேசி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா சில கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடைய கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார் எனவே தினேஷ் பேட்டி ஒன்றில் ராபர்ட்டை கடுமையாக திட்டி இருந்தார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ரட்சிதா ராபர்ட் இருவரும் ராஜா ராணியாக அருங்காட்சியகம் டாஸ்க் தேர்ந்தெடுக்கப்பட இவர்களுடைய நடவடிக்கைகள் பார்க்க சகிக்கவில்லை.

ரட்சிதாவுடன் நடனமாடுவது அவரை கையைப் பிடித்து இழுப்பது, கட்டிபிடிப்பது போன்ற லீலைகளை செய்து வந்த ராபர்ட் மாஸ்டர் உண்மையாக தன்னுடைய வயதில் மிகவும் குறைவாக இருக்கும் இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு பொருள் வந்துள்ளது.

ROBERT
ROBERT

அதில் ராபர்ட் மாஸ்டர் வெளியில் இருக்கும் பொழுது தன்னுடைய காதலிக்கு வாங்கி கொடுத்த மோதிரத்தை அனுப்பி தன்னுடைய காதல் முறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் குழப்பத்தில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் குயின்சியிடம் புலம்பி கொண்டு இருக்கிறார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

bigg-boss-6

ஜெயிலில் கூட ரச்சிதாவை விட்டுவைக்காத ராபர்ட்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மிகவும் சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 35 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்த வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வார எபிசோடில் சுவாரஸ்யம் குறைவாக விளையாண்ட போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்ஷிதா ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடுபவர் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து விடுவார் என்பதும் சரியாக விளையாடுபவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் சரியாக விளையாடாத இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.

அந்த வகையில் 16 போட்டியாளர்களில் அதிக பேர் ராபர்ட் மற்றும் ரட்சிதாவை தேர்ந்தெடுத்து சொல்கிறார்கள் இதனை அடுத்து ராபர்ட், ரட்சிதா இருவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட இருவரும் சிறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளின் வீடியோ தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது அரண்மனை டாஸ்க்கில் கூடவே இருந்து ரட்சிதா ஏமாற்றி விட்டதாக ராபர்ட் கதறி அழுதார். மேலும் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் ரட்சிதா மன்னித்து விடுங்கள் எனக் கூறிய பிறகும் அவர் சரியாகவில்லை. இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் இவர்களுடைய சண்டை தீருமா மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

maina

மைனாவை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.! கடுப்பில் தூக்கி எறியப்பட்ட பொருட்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் போட்டியாளர்கள் அனைவரும் சண்டைகள் போட்டுக் கொண்டாலும் போட்டி என்று வந்து விட்டால் மிகவும் மாசாக விளையாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாரம் தோறும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் வகையில் டாஸ்க்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் புது டாஸ்க் நடைபெற இருக்கிறது அதில் வீடு ராயல் மியூசியமாக மாற வேண்டும் என கூறப்படுகிறது அதில் ராஜா, ராணி, இளவரசி, சேவகன் போன்ற ரோல்களில் இந்த டாஸ்க் நடைபெற இருக்கிறது.

எனவே அந்த டாஸ்க் அறிவிக்கும்பொழுது போட்டியாளர்கள் அந்த ரோலுக்காக முண்டியடித்து வருகிறார்கள். இளவரசியாக யாரை தேர்வு செய்கிறீர்கள் என அசீம் கேட்கிறார் அப்பொழுது மைனாவுக்கு ஒருவர் கூட வாக்கு அளிக்கவில்லை அதன் பிறகு அதிக வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இளவரசியாக தேர்வாகிறார்.

அதன் பிறகு இறுதியில் சேவகனாக நிற்கிறார் அப்பொழுதும் ஒரு போட்டியாளர் கூட வாக்களிக்கவில்லை எனவே இப்படி எல்லோரும் அசிங்கப்படுத்துகிறீர்களே இளவரசி முதல் சேவகன் வரை அனைத்திலும் நின்றுவிட்டேன் ஒருவர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை எல்லாம் என் முதுகில் குத்தி விட்டார்கள் எனக் கூறி கோபத்தில் தலையணையை தூக்கி எறிகிறார்.

மேலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது இவ்வளவு சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இந்த வாரமும் ரகளை தான். மேலும் இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்று ஆர்வம் மக்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.