pakasooran

திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு ஆணுடன் இருந்தால் அதற்கு பெயர் கள்ளக்காதல்.. என இந்த காலத்து நிலைமையை புட்டு புட்டு வைக்கும் பகசூரன் படத்தின் டிரைலர்.!

முடிவுக்கு வந்த செய்திகளைஏராளமான இயக்குனர்கள் இயக்க தயங்கும் திரைப்படங்களை தைரியமாக இயக்கி அந்த படத்தினையும் வெற்றி பெற வைத்து வருபவர் தான் மோகன் ஜி. இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்து வரும் பகாசூரன் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பட குழுவினர்கள் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளார்கள். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் இதில் செல்வராகவன் ஒரு ரவுடியாகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 52 வருடங்கள் தாண்டியும் எந்த ஒரு பெண்ணையும் தொடாமல் இருந்து வந்த இவர் பிறகு இளம் பெண்ணை அடைய வேண்டும் என நினைக்கிறார். எனவே அடுத்தடுத்த இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இவ்வாறு வீட்டில் தனி அறையில் பெண்கள் என்ன செய்கிறார்கள். அதை கவனிக்க ஏன் பெற்றோர்கள் தவறுகிறார்கள் என்பதை பகசூரான் திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

மேலும் திருமணத்திற்கும் பிறகும் இன்னும் சில பெண்கள் வேறு ஒரு ஆண்களுடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில் அதனைப் பற்றியும் மோகன் ஜி பேசியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆண்களால் வலுக்கட்டாயமாக பாதிக்கப்படும் பெண்கள் ஏன் பெற்றோர்களிடம் கூறமாட்டார்கள் என் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சரியாக கவனிக்க மாட்டார்கள் என்பதையும் கூறுகிறது. இவ்வாறு தற்போது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

bakasoora

குற்றத்தை தடுக்க வேண்டும் என்றால் கதவை மூடிகிட்டு இருக்கிற பெண் என்ன பண்றார் என்பதை கவனிக்க வேண்டும்.! பகாசூரன் டீசர் இதோ..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் தற்பொழுது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகா சூரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் செல்வராகவன் தொடர்ந்து ஏராளமான கொலைகளை அடுத்தடுத்து செய்து வருவதும் இன்னொரு பக்கம் அந்த கொலைகளை செய்தவர் யார் என தீவிரமாக விசாரணை செய்து வரும் காவல் அதிகாரியாகவும் நட்பின் நடராஜ் நடித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இவ்வாறு நடித்துள்ள காட்சிகள் தான் அந்த டீசரில் காண்பிக்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் எதற்காக கொலை செய்கிறார் என்றும் செல்வராகவனை எப்படி நட்டி நடராஜ் கண்டுபிடிக்கிறார் என்பதும் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ்சாக இருக்கும் என கூறப்படுகிறது மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தன்னுடைய பிள்ளைகள் அல்லது பையன் கதவை மூடிக்கொண்டு ரூமில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனித்தால் தான் நாட்டில் குற்றம் குறையும் என்று நட்டி பேசும் வசனங்கள் இந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடிகிறது.

இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள் மேலும் இத்திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.