saanti

கோவை பள்ளி மாணவர்களுடன் விக்ரம் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட இயக்குனர் சாண்டி.! வைரலாகும் வீடியோ..

நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நடன இயக்குனர் சாண்டி. இவருடைய நடிப்பு திறமை ரசிகர்களால் கவரப்பட்ட நிலையில் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது மேலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும நடுவராக பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க கமலஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் அனிருத் இன் இசையமைக்க உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தினை வெளியிட்டது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மரண மாஸ் குத்து பாடல் தான் ‘பத்து தல’ இந்த பாடலில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் தன்னுடைய குரலில் பாடி நடனமாடி இருந்தார்.

மேலும் பெரிதாக நடனமாடவில்லை என்றாலும் தன்னுடைய சிம்பிளான ஸ்டெப்பால் மிகப்பெரிய ப்ரீச்சை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூர் சாவோதயா பள்ளியில் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 43வது ஆண்டு பள்ளிக்கான நடனப் போட்டிகள் கோவையில் உள்ள இடையர்பாளையம் என்ற இடத்தில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். இது குறித்து செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய இவர் சமூக வலைதளங்கள் நல்ல அப்டேட்டாக இருந்தால் கலைத்திறமைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் எளிதாக தங்களை திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வர முடிவதாக கூறினார்.

நடன கலைகளை அனைவரும் ஊக்குவிப்பதாகவும் பள்ளிகளில் இதற்கு தனியான வகுப்புகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில்  இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

lala

நடனம் ஆடுவதில் சாண்டியை ஓரம்கட்டிய லாலா.! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா எனக்கூறும் ரசிகர்கள்

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர் தான் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான சாண்டி. பிரபல டான்ஸ் மாஸ்டரான இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  அதோடு டான்ஸ் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நடுவராக பணியாற்றி வந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ அதே அளவிற்கு இவரின் மகளான  லாலாவும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதலில் பிரபல நடிகையான காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஆனால் இவர்களின் திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை எனவே விவாகரத்து பெற்றுக் கொண்ட சாண்டி இரண்டாவது முறையாக சில்வியா என்ற பெண்ணை 2018ஆம் ஆண்டு   காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

santi
santi

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து தான் லாலாவும் பிறந்தார். இந்நிலையில் லாலாவிற்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.  இந்நிலையில் சாண்டி மற்றும் லாலா இருவரும் விஜயின் தெறி பாடல் ஒன்றுக்கு நடனமாடிய உள்ளவர்கள்.  எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.