aari-arjunan

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் ஆரி மற்றும் அவரின் மனைவி.! வைரலாகும் ப்ரோமோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ஆரி. இவர் இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் எதனையும் மாற்றி பேசாமல் இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக இருந்து வந்தார்கள்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து மிகவும் நேர்மையான இருந்த ஆரியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்து விட்டது. எனவே பிக்பாஸ் சீசன்  4 வெற்றியாளராக ஆரியை தேர்ந்தெடுத்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் பகவான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் ஆரி 2015ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவ்வாறு ஆரியின் மனைவி மற்றும் குழந்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆரி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் பங்கு பெறவுள்ளார். அதாவது நம்ம வீட்டு கல்யாணம் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஆரி தன் மனைவியுடன் பங்கு பெறுகிறார்.  ஆரிய தொடர்ந்து நகுல் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அவரவர்களின் துணைவர்களுடன் பங்குப்பெற கொள்கிறார்கள்.அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

aari-3

அந்நியன் ரெமோ கெட்டப்பில் ஆரி.! வைரலாகும் பகவான் படத்தின் சூட்டிங் வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆரி.இந்நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரியே வெற்றியாளராக 50 லட்ச ரூபாய் என்றார்.

இவர் இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம் உட்பட இன்னும் சில படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்களில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தான் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்ற இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு உடல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்தவகையில் இவர் தற்பொழுது பகவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பகவான் திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அனைத்து போட்டியாளர்களும் இணைந்து வெளியிட்டார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக நேற்று திருவண்ணாமலை செஞ்சி கோட்டைக்கு அருகில் சூட்டிங்க எடுக்கப்பட்டது. அதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஷூட்டிங் பார்ட்டுக்கு வந்து ஆரியுடன் உரையாடி,புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அவ பொழுது எடுத்த வீடியோ ஒன்றை ஆரி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.