bigg-boss-6

ரயில் வண்டி போல் புகைபிடித்த போட்டியாளர்.! பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பிவிடுவேன் என எச்சரித்த பிக்பாஸ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மீண்டும் இனிமேல் இதனை செய்து வந்தால் உங்களை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என பிக்பாஸ் கூறியுள்ள நிலையில் இது போட்டியாளர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது எனவே இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கிரான்ட் பினாலே நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்திகிறார்கள் இதனால் இவர்களுக்கிடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் அதில் யார் இந்த வாரத்தின் இறுதியில் அதிக புள்ளிகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் முதல் போட்டியாளராக ஃபைனல் லிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இதற்காக அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் கன்ஸ்ட்ரக்சன் அறைக்கு ஏடிக்கேவை அழைத்து உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உங்கள் உடல்நிலை மோசமானதற்கு காரணம் நீங்கள் அடிக்கடி புகைபிடிப்பது தான் இனிமேல் நீங்கள் புகை பிடிக்கக் கூடாது என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே உங்கள் உடல் நலனை நீங்கள் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இனிமேல் நீங்கள் புகை பிடித்தல் உங்களை வெளியே அனுப்புவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏடிக்கே தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் நேரத்தில் தான் புகை பிடிக்கிறேன் என்றும் ஏனென்றால் அது தவறு என்று எனக்கு தெரியும் என்றும் இனி மேல் கவனமாக இருந்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அந்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

bigg-boss-6

டிக்கெட் டூ ஃபினாலே எந்த போட்டியாளருக்கு தெரியுமா.? வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

எனவே போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார் இதற்கு மேல் தான் இவர்கள் தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற்று வாழ்கிறார்கள்.

மேலும் இவர்களில் விக்ரமன் மற்றும் ஷிவில் ஆகிய இருவரில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் வெல்ல நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் அதற்கான டாஸ்க்களும் மிகவும் கடுமையாக இருந்து வரும் நிலையில் அந்த டாஸ்க்களில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பிக்பாஸ் சீசன் 6க்கான் டிக்கெட் டூ ஃபினாலே நேற்றிலிருந்து நடைபெற்ற வருகிறது. இதன் காரணமாக சோதனைகள் பலவற்றையும் தாங்கிக்கொண்டு அனைத்தையும் கடந்து முதல் போட்டியாளராக யார் அந்த நபர் என தீர்மானிக்கப்பட இருக்கிறது மேலும் இந்த வார இறுதியில் எந்த நபர் அதிக புள்ளிகள் எடுக்கிறாரோ அவருக்கு டிக்கெட் டூ ஃபினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து போட்டியாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடி வருகிறார்கள் அதில் தற்பொழுது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் நேரடியாக இறுதிக்கு செல்லும் அந்த போட்டியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.