நயன்தாரா மாதிரி இருக்கீங்க என மைனாவை பங்கு படுத்திய விஜே பார்வதி மற்றும் ஷோபனா.! புதிய வருகையால் பதட்டத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடியயிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் கடினமான டாஸ்க்களும் நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் அமுதவாணன் வெற்றி பெற்ற நிலையில் கிராண்ட் பினாலேவிற்கு நேரடியாக முதல் போட்டியாளராக சென்று இருக்கிறார். இவ்வாறு இந்த போட்டியில் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் ரட்சிதா மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். 91 நாட்கள் வரையிலும் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த ரட்சிதா மகாலட்சுமி ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் இந்த வாரம் இரண்டு நாமினேஷன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அதாவது நேற்று இந்நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா என்ட்ரி கொடுத்த நிலையில் அனைத்து போட்டியாளர்களையும் வச்சு செய்தார் இதனை அடுத்து தற்பொழுது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜேவாக பணியாற்றி வரும் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனாவை சிறப்பு விருந்தினர்களாக சென்றுள்ளனர்.

அப்பொழுது மைனாவிடம் பார்வதி நீங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள் உங்கள் காமெடிகளுக்கு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா என்றும் நான் பாட்டுக்கு இருக்கிறேன் டைட்டில் வின் பண்ணனும் என்ற எண்ணம் இல்லையா என்று கடுப்பாக கேட்கிறார் இதனை அடுத்து மைனா நயன்தாரா மாதிரி இருக்கிறார் தானே என்று ஷோபனாவும் மிகவும் பங்கமாக கலாய்த்துள்ளார்.

அசீமை பாராட்டி விக்ரமனை குறை சொன்ன தனலட்சுமி.! வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது தற்போது இந்நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் கிராண்ட் பினாலுக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள். மேலும் தற்பொழுது இந்நிகழ்ச்சியில் டிக்கெட் பினாலே டாஸ்க் நடைபெற்ற வருகிறது எனவே அனைத்து போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தனலட்சுமி பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் தன்னுடைய மனம் திறந்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த கேமுக்கு சரியான நபர் அசீம் தான் என்றும் அவர்தான் இந்த கேமுக்கு பொருத்தமானவர் என்றும் அவருடைய விளையாட்டு தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து விக்கிரமனை பற்றி பேசிய நிலைகளில் அவருடைய கேமை கேமாக விளையாடவில்லை என்றும் குறிப்பாக அவர் லெட்டர் எழுதுவது எல்லாம் கேமே இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பொம்மை டாஸ்க்கு தனலட்சுமி மீது அசீம் ஒரு அபாண்டமான புகார் கூறிய பொழுது கிட்டத்தட்ட அனைவருமே தனலட்சுமிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

அப்பொழுது தனலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே ஒரு நபர் விக்ரமன் தான் கமலஹாசன் மட்டும் குறும்படம் போட்டுக் காட்டவில்லை என்றால் தனலட்சுமி சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பார். எனவே அந்த வகையில் தனலட்சுமி ஆதரித்த விக்ரமனையே தனலட்சுமி தற்பொழுது பேட்டி ஒன்றில் குறை கூறியிருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மணிகண்டனுடன் சண்டை வந்தாலும் தற்போது வெளியே வந்த பிறகு அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவருக்கும் எனக்கும் ஒரு அண்ணன் தங்கை உறவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வெளிவந்த பிறகு இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முன்பு அமுதவாணன், ரட்சிதா, மைனா ஆகியோர்கள் நல்ல போட்டியாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும் ஆனால் வெளியே வந்து இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் அவர்களது உண்மையான சுயரூபம் தெரிகிறது என்றும் தனலட்சுமி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களில் தங்களுடைய உண்மையான முகத்தை அமுதவாணன், ரட்சிதா, மைனா இன்னும் காட்டவில்லை என்றும் குறிப்பாக அமிர்தவாணன் அதில் நம்பர் ஒன் என்றும் தனலட்சுமி கூறி இருக்கிறார். இவ்வாறு தனலட்சுமி கூறி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனலட்சுமி ஒரு நல்ல போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version