nikki galrani

தனது உடைகளை விற்று ஊரடங்காள் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்யும் நிக்கிகல்ராணி.! இந்த முயற்சியும் நல்லாத்தான் இருக்கு

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற ஒன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதோடு நாள்தோறும் பல கோடி உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கையறை இல்லாமல் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டும் வருகிறார்கள் அதோடு ஒரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது எனவே போலீசாரும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அத்தியாவசியம் என்று வெளிவரும் அனைவருக்கும் பெரும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முக்கியமாக இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் மக்களை கொன்று வர இன்னும் ஒருபுறம் ஏழைகள் பசியும் பட்டினி என கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அத்தியாவசியப் பொருள்களான நல்ல உணவு, உடை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்,சூர்யா, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிவி வழங்கியுள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து சில சின்னத்திரை நடிகைகளும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் தங்களால் முடிந்த உணவை தரமானதாக செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நிக்கி கல்ராணி புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளார். அதாவது தனியார் அமைப்பு ஒன்று அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உதவும் வகையில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அதாவது பணக்காரர்களாக இருப்பவர்கள் கொடுக்கும் ஆடைகள், பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து பணம் ஆக்கப்பட்டு அந்த பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த அமைப்பின் மூலம் நிக்கி கல்ராணி  நல்ல தரமானதாக உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள்  போன்ற பலவற்றையும் அந்த பவுண்டேஷனிடம் கொடுத்து உள்ளார்.

nikki kalrani
nikki kalrani

அதனை அவர்கள் விற்று பணமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.  இந்த வகையில் நிக்கி கல்ராணி வீடியோவில் என்னிடம் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தேவையானது போக மீதி உள்ள அனைத்து ஆடைகளையும் கொடுத்திருப்பதாக கூறி உள்ளார். அதோடு அனைவரும் இதேபோல் வைத்திருந்தால் நீங்களும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

itiyat

பேயையே அறவிடும் சிவா.! வைரலாகும் இடியட் பட டிரைலர்.!

பொதுவாக சினிமாவில் சில நடிகைகளால் தொடர்ந்து  முன்னணி நடிகைகளாக நிலைத்து நிற்க முடியாது. ஒரு சில பேர் எளிதில் பிரபலமடைந்த பிறகு மார்க்கெட் குறைந்ததும் சினிமாவில் சரியான கதை அமையாமல் திரைப்படங்களில் நடிக்காமல் தள்ளாடி வருவார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. இவர் பிரபுதேவா உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இடையில் சில காலங்கள் இவர் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்பொழுது தான் இவர் நடிப்பில் சில படங்கள் வெளிவர உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்பொழுது காமெடி நடிகர்களாக அறிமுகமான பலர் சில படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்கள். பொதுவாகவே காமெடி நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமானால் அவர்களின் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் சுவாரசியமானா ஒன்றாக அமையும்.

அந்த வகையில் தனது எதார்த்த காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சிவா. இவர் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது நடிப்பைத் தொடர்ந்தார். இந்த வகையில் பேயை மையமாக வைத்து காமெடி படம் ஒன்றில் நிக்கிகல் ராணி சிவா உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளார்கள்.

அந்தத் திரைப்படத்திற்கு இடியட் என்று பெயர் வைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் நிக்கிகல்ராணி ஆண் பேயாக நடித்துள்ளார். இதற்கு முன்பே நிக்கி கல்ராணி டார்லிங் காமெடி கலந்த பேய் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிக்கி கல்ராணி மற்றும் சிவா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.