biggboss-4-anitha1

குறும்படம் போட சொல்லி கேட்கும் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

anitha sampath: இன்று வெளியான முதல் ப்ரமோவில்  ஷிவாணியை கார்னர் செய்யும் ஹவுஸ் மெட்கள். ஷிவானியுடன் ஆறுதலாக பேசும் ஆரி, ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தா. மேலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வெளியானது அதில் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் அழுது கொண்டு பேசுகிறார்.

அதாவது அவருக்கு நிஷாவை ரொம்ப பிடிக்குமாம் காரணம் அவர் அம்மாவும் நிஷாவை போல கருப்பாகத்தான் இருப்பாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர் நகை கூட போடமாட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் தான் கருப்பாக இருக்கிறோம் என்று மிகவும் தாழ்வு மனப்பான்மை யோடும் இருப்பாராம். நீங்கள் மிகவும் தைரியமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மற்றவர்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். என் அம்மாவும் உங்களிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த அடுத்த ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷிடம் சண்டை போடுவது போன்ற காட்சி வெளியானது. அதாவது சண்டைக்கான காரணம் என்னவென்றால் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத்திடம் பேசும்போது பொதுவாகவே நான் செய்திவாசிப்பாளர்களிடம் பேசுவது இல்லை அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என சொன்னதாக அனிதா சம்பத் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி நான் அப்படி கூறவே இல்லை என கூறுகிறார். அதற்காக அனிதா சம்பத் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என சொல்கிறார். அதைக் கேட்ட சுரேஷ் குறும்படம் என்ன பெரும் படம் கூட போட்டு பாருங்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ.

biggboss-4-anitha

வெளிவந்த 3வது ப்ரோமோ!! வந்தவுடனே சண்டையை ஆரம்பித்த அனிதா சம்பத்!! இரண்டாய் போன வீடு.!! வைரலாகும் வீடியோ.

2day 3rd promo anitha sampath fight with suresh chakravarthy video:பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி நன்றாக போய்க் கொண்டிருந்தபோது நேற்று பிக்பாஸ்டாஸ்க் ஒன்றை வைத்தார். அதன் மூலம் ரம்யா பாண்டியன் இந்த வார தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதனைத் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பிடிக்காத போட்டியாளர்கள் என இருவருக்கும் ஹார்ட் சிம்பிள் மற்றும் ஹார்ட் பிரேக் சிம்பிள் கொடுத்து 2 பெயருக்கு போட சொன்னார்கள்.

அதில் அதிகப்படியான ஹார்ட் பிரேக் வாங்கியவர் சிவானி. இதனால் அவர் சோகத்தில் ஆழ்ந்து இருந்தார் வெளிவந்த முதல் ப்ரமோவில் ஆரி ஷிவானி நாராயணனனுக்கு ஆறுதல் சொல்வது போல தெரிந்தது.

அதனைதொடர்ந்து அடுத்ததாக வெளியே வந்த ப்ரமோவில் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் உங்களைப் பார்த்தா எனது அம்மா போல உள்ளது எனக்கூறி அழுகிறார். மேலும் என் அம்மாவும் கருப்பாக தான் இருப்பாங்க அதனால தான் ஒரு நகை கூட போட்டுக்க மாட்டாங்க. ரொம்ப இன்பிரியரா இருப்பாங்க என சொல்லி அழுகிறார்.

அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த மூன்றாவது ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டையிடுவது போன்று வீடியோ வெளியானது. அதுமட்டுமல்லாமல் அனிதா சம்பத் குறும்படம் போட சொல்லி பிக்பாஸிடம் கேட்கிறார்.

இதோ அந்த ப்ரமோ.