செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.! அட, ரசிகர்களுக்கு செம்ம சந்தோசம் தான் இனி..

டிஆர்பி-யில் முன்னணி வைப்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களையும், ரியாலிட்டி ஷோக்களில் ஒளிபரப்புவதை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் அமோக வெற்றியை பெற்றது. பல இளைஞர், இளசிகளின் ஃபேவரட் சீரியலாக இருந்து வந்த நிலையில் திடீரென்று ஆதி கேரக்டரில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

அதன்பிறகு சீரியல் டிஆர்பி-யில் பெரிதாக முன்னணி வலிக்கவில்லை. இந்த சீரியல் அமோக வெற்றி பெறுவதற்கு காரணம் ஆதி பார்வதி கேரக்டர்தான்.  இவர்களின் ஹெமிஸ்ட்ரி ரசிகர்கலால் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து அகிலா கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த சீரியலில் ஆதி பார்வதி இவர்களின் திருமணம் மற்றும் அதற்கு பிறகு நடந்த பிரச்சனைகள் போன்ற எபிசோடுகள் மிகப்பெரிய ஹிட் பெற்று சேனல் வரலாற்றிலேயே டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கார்த்திக்ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற தகவலை சீ தமிழ் அறிக்கையாக வெளியிட்டு இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஆதி இந்த சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் குறைந்தது. பிறகு ஆதி கேரக்டரில் யார் நடிப்பார் என்று ஆவலாக காத்திருந்த நிலையில் விஜே அக்னி நட்சத்திரம் அறிமுகமானார். இவர் யூடியூப் சேனலில் ஆங்கராகவும், விஜேவாகவும் பணியாற்றி வந்தார். அதோடு ஏராளமான திரை பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

அதில் விஜய் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் இவரின் பேச்சு திறமையை பாராட்டி உள்ளனர். இவரும் நன்றாக தான் சமீபகாலங்களாக நடித்து வருகிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இனி வரும் திங்கட்கிழமை முதல் செம்பருத்தி சீரியல் முதல் எபிசோடில் இருந்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். காலை 8 மணி முதல் 9:30 மணி வரை ஒலிபரப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Leave a Comment