“காமெடி கிங்”விவேக் இறந்ததை கேட்டு முதல் ஆளாக ஓடி வந்த நடிகர் சூர்யா.! சோகத்தில் ஆழ்த்தும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரமாக இடத்தை பிடித்தவர் நடிகர் விவேக் மேலும் அவர் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படத்தில் காமெடியில்  மக்களை சிரிக்க வைத்தாலும் அதில் சிந்திக்க வைக்க ஏதாவது ஒரு புதிய முயற்சியை கையாளுவது விவேக்குக்கு வழக்கம்.

மேலும் விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு முதல் ஆளாக தன்னை முதன்மைப் படுத்தி கொண்டு வருவார் விவேக் அப்படித்தான் இப்போதும் கூட கோரோன்னா காலகட்டத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல கருத்துக்களையும் சமுதாய சிந்தனையும் கொடுத்து வந்த விவேக் தடுப்பூசிகளும் முதல்  ஆளாக வந்து போட்டுக்கொண்டு மற்ற மக்கள் மற்றும் பிரபலங்களையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும் என கூறி குறுகிய நாட்களே ஆன நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவர் இன்று அதிகாலை தனியார் ஆஸ்பத்திரியில் அதிகாலை  4:45 மணிக்கு இறந்தார் அதனை முன்னிட்டு இவரது உடல் அவரது சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளத.

இதனை தெரிந்து கொண்ட மக்கள் மற்றும் பிரபலங்கள் தற்போது அவரது வீட்டை நோக்கி தனது ஆறுதலையும், அனந்தமங்கலம் செலுத்த சென்று கொண்டு இருக்கின்றனர் அப்படி முதல் ஆளாக நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் வந்து மாலையை போட்டு தனது அனுதாபங்களை தெரிவித்தார்.  அந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version