தர லோக்கலாக கெட்டவார்த்தையில் கொலநாசம் செய்துள்ள சூர்யா.! அதுக்குன்னு இப்படியா பச்சை பச்சையா திட்டுறது.! அதிர்ந்த சென்சார் அதிகாரிகள்.

soorarai pottru movie censor : நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் சமீபகாலமாக எப்படியாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என போராடி வருகிறார், ஏனென்றால் இவரால்  சமீப காலமாக எதிர்பார்த்த வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் மாஸ் திரைப்படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் தான் சூரரை போற்று, இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

அதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, அதுமட்டுமில்லாமல் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது, சூரரைப்போற்று திரைப்படம் சூர்யாவிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என படத்தை பார்த்த பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்தநிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தை சென்சார் செய்வதற்காக தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்தில் உள்ள 12 கெட்ட வார்த்தைகளை நீக்குமாறு படக்குழுவிற்கு அறிவுரை கூறியுள்ளார்கள். பொதுவாக சூர்யா திரைப்படத்தில் கெட்டவார்த்தைகளை கேட்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சுதா கொங்கரா திரைப்படம் என்றாலே சொல்லவே வேண்டாம் ஏனென்றால் இறுதிசுற்று திரைப்படத்தில் கொலை நாசம் செய்து இருப்பார் கெட்டவர்த்தையால். அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்தில் கெட்ட வார்த்தைக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது.

சென்சார் அதிகாரிகளே இந்த வார்த்தைகளை நீக்க சொல்லி இருப்பதால் அந்த அளவு மிகவும் மோசமான வார்த்தைகளாக இருக்கும் என தெரிகிறது.

சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்குள் கொரனோ தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மட்டுமே இது சாத்தியம் இல்லையென்றால் OTT யில் தான் போல.

Leave a Comment