முன்னணி இயக்குனரை டீலில் விட்ட சூர்யா.! கைகொடுத்து தூக்கிவிடும் விக்ரம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில்  ஒருவர் தான் ஹரி இவர் சூர்யாவை வைத்து “அருவா” என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் ஆனால் கொரோனா என்ற பிரச்சனை வந்ததால் அந்த படத்தின்  பேச்சு அப்படியே முடங்கிவிட்டது.

மேலும் சூர்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ஹரிக்கு அருவா என்ற திரைப்படத்தை பற்றிய சூர்யாவும் எதுவும் வாய் வைத்திருக்கவில்லை என்றும் கூறலாம்.

அதனால் ஹரி தனது படத்திற்கு வேறொரு நடிகரை கமிட்மெண்ட் செய்து உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் ஹரி விக்ரமை வைத்து 3 தடவை படங்கள் இயக்கியுள்ளார் அதிலும் இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் ஹரியின் கூட்டணியில் சியான் விக்ரம் நான்காவது முறையாக கைகோர்த்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்து வெளிவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரே உற்சாகமாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment