வாடிவாசல் திரைப்படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் சூர்யா.? அதுவும் எப்பொழுதிலிருந்து தெரியுமா.?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று பல கோடி வரை வசூல் செய்து இருந்தாலும் நடிகர் சூர்யாவுக்கு அது திருப்திகரமாக இல்லை என்று தான் கூற வேண்டும் ஆனால் இவர் சமீப காலமாக ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும்.

என்ற எண்ணத்தில் நல்ல நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் பணியாற்றியும் வருகிறார் வாடிவாசல் திரைப்படம் கூடிய சீக்கிரம் தொடங்க இருக்கிறதாம்.

விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் சமீபத்தில் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை பற்றி சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளாராம்.அதில் வெற்றிமாறன் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக காளைகளுடன் பழக வேண்டும் என்று தனது வீட்டில் இரண்டு காலை கன்றுகளை வாங்கி வளர்த்து வருகிறார்.

ஆனால் நாங்கள் பார்க்கும் பொழுது சின்ன கன்றுகளாக இருந்த இரண்டு காளைகளுமே தற்பொழுது பெரிய காளைகளாக இருக்கிறது ஆனால் சூர்யா பயப்படாமல் அந்த காளைகளை வளர்த்து அந்த காளைகளுடன் நன்றாக பழகி வருவதாகவும் வெற்றிமாறன் கூறியதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

surya
surya

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் வாடிவாசல் திரைப்படம் எப்பொழுது படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் தற்பொழுதே பல விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment